ராம நவமி வன்முறை குறித்து என்ஐஏ விசாரிக்க உத்தரவு
கொல்கத்தா,ஏப்.27- மேற்கு வங்கத்தில் ராமநவமியன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியை முன்னிட்டு மூன்று மாவட்டங்களில் வன்முறை நடந்தன. இந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டின. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த அதிகாரி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் வன்முறை தொடர்பான வழக்குகளை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர்,ஏப்.27- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதி கரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதனன்று அணைக்கு வரும் நீரின் அளவு 334 கன அடியாக இருந் தது. இந்த நிலையில் வியாழனன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 346 கன அடியாக அதி கரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 101.59 அடி யாகவும், அணையின் நீர் இருப்பு 66.91 டி.எம்.சி ஆகவும் உள்ளது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை, கட லூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது நிறுத்தப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் முழுமையாக நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப் பட்டது நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குருமூர்த்தி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, ஏப். 27 - 2018-ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் ராவ் குறித்து துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட கருத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கில், துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கோரி, தனது பதிவையும் நீக்கிவிட்டார் என அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வியாழனன்று வாதிட்ட நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தில்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
ராகுல் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
அகமதாபாத்,ஏப்.27- மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்ட னை விதித்தது. இதையடுத்து மிக அவசர அவசரமாக ராகுலின் எம்.பி. பதவியை பறித்தது ஒன்றிய பாஜக அரசு. தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். இந்த வழக்கை நீதிபதி கீதா கோபி விசாரிப்பதாக இரு ந்தது. அதன்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பி.எஸ்.சாப் பனேரி வியாழனன்று ஆஜரானார். அப்போது வழக்கில் இருந்து விலகியதாக நீதிபதி கீதா கோபி கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பும்படி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். எனவே, வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.
ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் 4 ஆம் நாளாக சோதனை
திருச்சிராப்பள்ளி, ஏப்.27- ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டிய தாகவும் ஜி-ஸ்கொயர் நிறு வனம் மீதான புகாரின் அடிப் படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. திருச்சி கண்டோன் மெண்ட் பகுதியில் அமைந் துள்ள ஜி-ஸ்கொயர் அலுவ லகத்தில் பெண் அதிகாரி மஞ்சுளா உட்பட 4 வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வியா ழனன்று 4 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
மயிலாடுதுறை, ஏப்.27- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர் வாகிகளுக்கான மாநில தேர்தல் நடைபெற்றது. பேராசிரியர் கோ.ஜோப் பிர பாகர் முதன்மை தேர்தல் அதிகாரி யாக செயல்பட்ட இத்தேர்தலில் சங்கத்தின் தலைவராக சென்னை விவேகானந்தா கல்லூரியின் பேராசிரியர் காந்திராஜ், பொதுச் செயலாளராக பரமத்திவேலூர் கந்தஸ்வாமி கந்தாஸ் கல்லூரி யின் பேராசிரியர் கிருஷ்ணராஜ், பொருளாளராக பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் பேரா சிரியர் சேவியர் செல்வக்குமார் ஆகியோர் 2023-2025 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமன தாக தேர்வுசெய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சங்கத்தின் பொறுப்பாளர் களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பேரூராட்சிகளிலும் காலை உணவுத் திட்டம்
சென்னை,ஏப்.27- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில்,“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக் குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் வியாழனன்று(ஏப்.27) நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, அப்பள்ளி யில் செயல்பட்டு வரும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் தேவையை கண்டறிந்து, அவர்களின் கற்றலை எளிமையாக்க செயல்பட்டு வரும் மையத்தை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
குட்காவுக்கு மீண்டும் தடை: இன்று ஆலோசனை கூட்டம்
சென்னை,ஏப்.27- குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பது குறித்து சென்னை தலை மைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) ஆலோசனைக் கூட்டம் நடை பெறுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று பரவலை கையாள தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகை யிலை பொருட்களுக்கு தடை குறித்து மாவட்ட சுகாதார அலுவர்களுடன் வெள்ளியன்று (ஏப்.28) ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் குட்கா விவகாரம் பற்றி ஆலோசிக்கப் படுகிறது. குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை பற்றி தகவல்கள் கொடுத்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும். குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,ஏப்.27- தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 30 ஆம் தேதி நீலகிரி, கோவை ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. மே 1 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது?
சென்னை,ஏப்.27- கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 633 சுய நிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க லாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க லாம் என தகவல் வெளியாகியுள்ளது. 12 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட வுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக் ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது. தமிழ்நாட்டு பள்ளிக்கல்வியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13 தொடங்கி ஏப்.3 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு, புதுச் சேரியிலிருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித் திருந்தனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தி லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்ட ணமின்றி மதிப்பெண் சான்றிதழ்க ளுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மக்கள் பணத்தில் ஆன்லைன் ரம்மி: ரூ.43 லட்சம் சுருட்டிய வங்கி காசாளர்
விழுப்புரம், ஏப்.27- விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிந்தாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் வரவு செலவுக்கணக்கு வைத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கும், வியா பாரிகளுக்கும் வங்கி கடன் உதவியும் செய்து வருகிறது. அந்த வங்கியில் பணம் இருப்பு தொகை 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. திடீரென ரொக்கப் பணம் முழுவதும் காண வில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக காசாளர் அறையி லிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கேசியர் முகேஷ் எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யான காரணத்தை கூறி விட்டு வங்கிப் பணத்தை அள்ளிக் கொண்டு முகேஷ் தலை மறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கேஷியரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து வங்கி பணத்தை பெற்றுத் தருமாறு புகாரில் மேலாளர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மேலாளரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த வங்கிக்கு நேரடியாக சென்று விசா ரணை நடத்தினார்கள்.தொடர் விசாரணையில் பணத்துடன் தலை மறைவான கேசியர் முகேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மக்கள் பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி 20 லட்சம் ரூபாய் இழந்தது தெரியவந்துள்ளது.