states

img

காலத்தை வென்றவர்கள்

குயென் தி மின் கைய், வியட்நாமிய புரட்சியா ளர் மற்றும் இந்தோசீன கம்யூனி ஸ்ட் கட்சியின் இணை நிறுவனர்.  குயென் தி மின் கைய், வியட் நாமின் கே.அன் மாகாணத்தில் பிறந்தவர். இவரது தந்தை குயென் ஹை பின் ஹனோய் பகுதியைச் சேர்ந்தவர். இவர் வின் பகுதியில் ரயில்வே அதிகாரியாக பணியாற் றினார். இவரது தாய் கா தி துர், கடை ஒன்றை நடத்தி வந்தார். குயெனின் புரட்சிகரப் பணிகள் அனைத்திற்கும் இவரது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். மகள் குயெனின் புரட்சிப் பயணத்திற்கு, தாயார் கா தி துர் பொரு ளாதாரரீதியாக மிகவும் உதவியாக இருந்தார். 1927 இல், மின் கைய் வியட்நாமின் புதிய புரட்சிக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் இவர். இதுவே பின் னாளில் இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியாக உரு வெடுத்தது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி இக்கட்சியே!

குயென், இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்தார். 1930 ஏப்ரல் மாதம் ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்ட குயென், வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோ-சி-மின் அவர்களது உலக பொதுவுடமை அமைப்பு அலு வலகத்தின் (Orient Bureau of the Comintern) செயலா ளராக செயல்பட்டார். (Communist International என்பதன் சுருக்கமே Comintern. இது 1919 இல் மாஸ்கோ வில் லெனின் நிறுவிய ஒரு சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பாகும்.) சில ஆண்டுகளில், ஹாங்காங்கின் பிரிட்டிஷ் காலனிய அரசால் குயென் கைது செய்யப் பட்டார். பிரிட்டிஷ் அரசு, இவரை பிரெஞ்சு அரசிடம் ஒப்ப டைக்க திட்டமிட்டது. ஆனால், குயென் காண்டோனீஸ் (Cantonese என்பது சீன-திபெத் மொழிக் குடும்பத்தின் ஒரு தென்சீன மொழி) மொழியில் புலமை பெற்றிருந்த தால், பிரிட்டிஷ் அரசின் அம்முயற்சி தோல்வியடைந்தது. இதற்குப் பதிலாக, குயென் சீன சிறைகளில் 1931 முதல் 1934 வரை அடைக்கப்பட்டார். 1934 இல் விடுதலையான குயென் மற்றும் கட்சி யின் சக தலைவர் லீ ஹாங் போங், மாஸ்கோவில் நடை பெறவிருந்த பொதுவுடமை அமைப்பின் ஏழாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின் நாட்களில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1936 இல் சைகோன் (Saigon - தெற்கு வியட்நாமின் ஒரு நகரம். முன்பு இது பிரெஞ்சு இந்தோ-சீனாவின் தலை நகராக இருந்தது) நகருக்கு திரும்பிய மின் கைய், அந்நகரின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவ ரானார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சு அரசு இவரை கைது செய்து, 1941 ஆகஸ்ட் 28 அன்று இவ ருக்கு மரண தண்டனை விதித்தது. இவரது கணவரான லீ காங் போங்க் 1939 இல் கைது செய்யப்பட்ட நிலையில், 1942 ஆம் ஆண்டு சிறையிலேயே உயிரிழந்தார்.

இன்று தோழர் குயென் கைய் நினைவு நாள்