சென்னை, ஏப்.28- முதலமைச்சரை வேந்த ராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கு வதற்கான சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஏப்ரல் 28 அன்று நிறைவேற்றப்பட்டது. சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்கும் மசோதா ஏப்ரல் 27 அன்று சட்ட மன்றத்தில் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தால் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 28 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இணை வேந்தராக மருத்து வத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இருப் பார்கள் என அறிவிக்கப பட்டுள்ளது. மசோதாவில் கூறப்பட்டி ருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள சித்தர்களால் சித்த மருத்துவ பாரம்பரியமானது உருவாக் கப்பட்டது. இதேபோல ஆயுர்வேதா மற்றும் யோகா ஆகியவை இந்தியா முழுவதும் வளர்ச்சிய டைந்தன. ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகிய பாரம்பரிய சிகிச்சையா னது ஆரம்பக் காலத்தில் இந்தியாவுக்கு வெளியே உருவாகியிருந்தாலும்,
இந் திய கலாச்சாரத்தில் ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) மருத்துவ முறைகள் வள மான பாரம்பரிய மற்றும் இலக்கியங்களைக் கொண் டுள்ளன. சித்த மருத்துவம் மற்றும் பிற பாரம்பரிய முறை மருந்துகளின் அறிவி யல் முறை மதிப்பீடானது, அதன் நன்மைகள், மனித இனம் முழுவதற்கும் சென்ற டையும் வகையில் பரவிட மேலும் ஆராய்ச்சி செய்வது தேவையாகிறது. சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோ பதியின் முறைகள் பிறவற்றிற்கு, ஆராய்ச்சிக்கான முக்கியத்து வம் அளித்து மேம்படுத்து வதற்காக, அதன் நோக்கங் களுக்காக தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழ கம் ஒன்றை நிறுவலாம் என அரசு கருதுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கவுள்ள சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் 47 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் இணைப்பு பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.