states

அரிசி உற்பத்திக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும் புதிய பாசுமதி அரிசி வகைகள்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) சமீபத்தில் வணிக ரீதியாக இரண்டு பாசுமதி அரிசி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும், தண்ணீரை சேமிக்கும், நேரடி நெல் விதைப்பு நுட்பத்தை ஊக்குவிக்கும்  என்று கூறுகிறது. அதாவது நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பறித்து நடவு செய்யும் பாரம்பரிய முறையைத் தவிர்த்து  நேரடி விதைப்பு நல்ல பலனைத் தரும் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் கூறுகிறது. நெல் உற்பத்தி பாதிப்பிற்கு களைகள் முக்கியக் காரணியாக உள்ளது. களைகள் அதிகரிப்பு உற்பத்தியில் 10 முதல் 30 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். உகந்த சூழ்நிலையில் மகசூலில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படாது. திறமையான நீர் மேலாண்மை நடைமுறைகளின் கீழ் பாசன நீரில் 12-35 நீர் சேமிக்கப்படும். நாற்றுகளை வேரோடு பிடுங்குவதையும், நாற்று நடுவதையும் நீக்குவதன் மூலம் உழைப்பு குறைகிறது. சாகுபடி நேரம், செலவு குறைகிறது. பயிர்கள் வேகமாக முதிர்ச்சியடையும். சாகுபடி செலவைக் குறைப்பதன் மூலம் மொத்த வருமானம் அதிகரிக்கிறது.  புதிய வகை நெல் ரகங்கள் மீத்தேன் போன்ற பசுமைநிற வாயுக்களைக் குறைக்கும். இதன் மூலம் உற்பத்திஅதிகரிக்கும்.  பூசா பாசுமதி- 1985  களைக்கொல்லியைத் தாங்கும் சக்தி கொண்டது. இதன் சராசரி மகசூல் ஹெக்டருக்கு 52 குவிண்டால். நீர்ப்பாசனம் செய்யப்பட்ட நிலையில் 45.7 குவிண்டாலாகும். இது 115 நாட்களில் முதிர்ச்சியடையும். இந்த ரக நெல் தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரபிரதேசப் பகுதிகளுக்கு ஏற்றது.  இதற்கு முன்பு பூசா பாசுமதி-1979 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு ரகமும் பூசா பாஸ்மதி-1121, பூசா பாசுமதி 1509-ஐ விட சிறந்தது என விஞ்ஞானிகள் கூறினர். பூசா பாஸ்மதி 1979, பூசா பாஸ்மதி 1985 ஆகிய ரகங்களில், மாற்றப்பட்ட அசிட்டோலாக்டேட் சின்தேஸ் (ஏஎல்எஸ்) மரபணு உள்ளது. இதில் களைகளைக் கட்டுப்படுத்த (Imazethapyr) இமாசெதாபைரை தெளிக்கலாம் எனவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைக்கிறது.

சாகுபடிச் செலவு அதிகரிக்கும்

ஆனால், நேரடி பயிர் முறையில் பணிபுரியும் (ஆய்வு செய்யும்) விஞ்ஞானிகள், அரசாங்கம் கூறுவது தொழில்நுட்ப ரீதியாக அறிவியல் உண்மைகளின் “அதிகப்படியான மிகைப்படுத்தல்”  என்பதோடு  இந்திய அரிசியின் மரபணு, வேறுபாட்டிற்கு சாதகமாக இல்லை. இது இந்தியாவின் அரிசி உற்பத்திக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் எச்சரிக்கின்றனர். இமாசெதாபைர் (Imazethapyr) களைக்கொல்லியின் பயன்பாடு குறிப்பிட்ட வகை அகன்ற இலை களைகளை மட்டுமே அழிக்கும். உலகளவில், சோயாபீன், பருப்பு வகைகள் போன்றவற்றுக்கு இமாசெதாபைர் களைக்கொல்லி பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நெல் பயிருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. மற்ற வகை களைகளுக்கு, விவசாயிகளுக்கு மீண்டும் களைக்கொல்லி தேவைப்படுகிறது. இது சாகுபடி செலவை அதிகரிக்கும். விதைச் சந்தையை ஏகபோகமாக்கும் மேலும், களைக்கொல்லிகளை எதிர்த்து வளரும் இந்த பாசுமதி அரிசியானது இந்திய அரிசியின் மரபணு வேறுபாட்டை எதிர்மறையாகப் பாதிக்கும், ஏனெனில் இது அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கிளீரோசிஸ்  (Amyotrophic Lateral Sclerosis) மரபணுவைக் கொண்ட குறிப்பிட்ட வகைகளுக்கு ஆதரவாக விதைச் சந்தைகளை ஏகபோகமாக்குகிறது. ஏஎல்எஸ் என்றால் என்ன? அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கிளீரோசிஸ் என்பது ஒரு அபாயகரமான  நோயாகும். இது முதுகுத் தண்டு மற்றும் மூளையில் உள்ள நரம்பு செல்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இறந்த பிரபல பேஸ்பால் வீரரின் பெயரால் இது  லூ கெஹ்ரிக் நோய் என்று அழைக்கப்படுகிறது. ஏஎல்எஸ் என்பது நரம்பு மற்றும் தசையின் செயல்பாட்டை பாதிக்கும் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாகும். பஞ்சாப்-ஹரியானாவில் பி.டி பருத்தியில் ஏற்பட்ட பாதிப்பை அனைவரும் நன்கு அறிவார்கள். அங்கு புதிய இளஞ்சிவப்பு பந்து புழுக்கள் பி.டி பருத்தியில் உருவானது. இது பருத்தி உற்பத்தியை கடுமையாகப் பாதித்தது. ஹரியானா மாநிலத்தில்  72,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பின் மூலம் 31,500 கோடி லிட்டர் தண்ணீர்  குறுவை காலத்தில் (2022-ஆம் ஆண்டு) சேமித்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவிக்கிறது. 2023-ஆம் ஆண்டு குறுவை  காலத்தில் 2,45,493 ஏக்கரில் நடைபெற்ற நேரடி நெல் விதைப்பின் மூலம் 2,48,702 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்விதைப்பின் மூலம்  செலவு குறைந்தது. உற்பத்தியும் இருந்தது. ஆனால் புதிய எச்டி ரகங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயப்பதாகவோ, நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நெல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவாகவோ இல்லை.

-வீரேந்திர சிங் லாதர்,
முன்னாள் முதன்மை விஞ்ஞானி  
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லி