கொல்கத்தா, செப். 6- சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் பாஜகவில் இருந்து விலகுவதாக வெளிப் படையாக புதனன்று அறி வித்து, கட்சியின் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “சகோ தரர்களான சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சரத் சந்திர போஸ் ஆகியோரின் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கு பாஜகவிடம் இருந்து எனக்கு எந்த ஆதர வும் கிடைக்கவில்லை. நான் மக்களைச் சென்றடைய வங்காள உத்தியை பரிந்து ரைக்கும் ஒரு விரி வான திட்டத்தை முன்வைத் தேன். ஆனால் எனது முன் மொழிவுகள் புறக்கணிக்கப் பட்டன. இந்த துரதிர்ஷ்டவச மான சூழ்நிலைகளால் நான் பாஜகவில் இருந்து வெளி யேறுகிறேன்” என குறிப் பிட்டுள்ளார். சந்திர குமார் போஸ் மேற்கு வங்க மாநில பாஜக துணை தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.