கோவை, டிச. 22- அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு வணிக மேலாளர்களின் அலட்சியம்; இதனை கண்டுகொள்ளாத மேலாளர்களின் கவனக் குறைவால் ஓடாத அரசு பேருந்துகளுக்கு ரூ.18 லட்சம் அபராதத்துடன் தண்டம் கட்ட வேண்டிய நிலை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயங்கி வந்தநிலையில், கொஞ்சம் கொஞ்ச மாக கரைந்து தற்போது சுமார் 2 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கின்றன. மோட்டார் வாகனச்சட்டப்படி, வாகனத்தின் ஆயுட்காலத்தைப் பொறுத்து வருடத்திற்கு ஒருமுறையோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ வாகனத்தை புதுப்பித்து வட்டார போக்குவரத்து அலுவல கத்தில் வாகனத்தை காட்டி எப்சி (தகுதிச் சான்றிதழ்) பெற்று பின்னர் வாகனங்கள் இயக்கப்படும். இது அனைத்து வாகனங் களுக்கும் பொருந்தும்.
இதில், வணிக பயன்பாடு உள்ள வாகனங் கள் மூன்று மாதம் அல்லது ஒரு வருட காலம் என வணிக பயன்பாட்டு வரி கட்ட வேண்டும். இதில், எப்சி காலத்தில் வாக னங்கள் புதுப்பிக்கும் பணி இருக்கும் நிலை யில், வாகனம் இயங்காது என்பதால், அந்த குறிப்பிட்ட இயங்காத நாட்களுக்கு சம்பந்தப் பட்ட வாகனத்தை குறிப்பிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடிதம் அளித்து வணிக பயன்பாட்டு வரியில் இருந்து விலக்கு பெறமுடியும். தற்போது அனைத்தும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை என்ப தால், இணையத்தில் இருந்தே விண்ணப் பித்து வரியில் இருந்து விலக்கு பெறுவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் பேருந்துகள் வணிக பயன்பாட்டு பேருந்துகள் என்பதால் எப்சி காலத்தில் வணிக வரியில் இருந்து விலக்கு பெற முறைப்படி கடிதம் அளிக்காததால் ரூ.18 லட்சம் தண்டம் கட்ட வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் எப்சிக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவல கத்தில் கடிதம் அளித்து வணிக வரியில் இருந்து விலக்கு பெறாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். ஒருவரு டத்திற்கும் மேலாக கடிதம் அளிக்காததால் ரூ. 12 லட்சம் வணிக வரி கட்ட வேண்டிய நிலை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனையில் உள்ள வணிக மேலாளருக்கு (கமர்சியல் மேனே ஜர்) இது பிரதான பணியாகும். ஆனால் ஒருவருடத்திற்கும் மேலாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மேலாளர்கள் இதனை அலட்சியப் படுத்தியதால் தற்போது ரூ.12 லட்சம் ஓடாத பேருந்துக்கு வரி கட்ட வேண்டியுள்ளது. மேலும், இந்த தொகை தொடர்ந்து கட்டா மல் இருப்பதால் ரூ.6 லட்சம் அபராதம் விதித்து, மொத்தம் 18 லட்சம் ரூபாய் கட்ட வட்டார போக்குவரத்துத் துறை உத்தர விட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய அரசு போக்குவரத்துக் கழக மேலதிகாரிகளின் கவனக்குறைவும் இதில் அடங்கும்.
தற்போது அரசு போக்குவரத்து கோவை கோட்ட அதிகாரிகள் வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு சென்று ஆர்டிசி யை (போக்குவரத்து ஆணையர்) சந்தித்து விலக்கு கேட்டு நடையாய் நடந்து கொண்டி ருக்கின்றனர். அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் ஒருவர் டிக்கெட் புத்தகத்தில் பணி நெருக்கடி காரணமாக ஸ்டேஜ் என்ட்ரி செய்யாமல்விட்டால் சஸ்பென்ஸ், இடமாற்றம் என ஊழியர்களை விரட்டி யடிக்கும் கழக அதிகாரிகள், தற்போது, ஓடாத பேருந்துக்கு இவர்களின் ஒட்டு மொத்த கவனக்குறைவால் ரூ.18 லட்சம் தண்டம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார்களா அல்லது அனைத்தையும் கூட்டு சேர்ந்து மறைக்க முயற்சி செய்வார்களா என்பது பிறகுதான் தெரிய வரும் என்றார்.
- அ.ர.பாபு