states

நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பம்

சென்னை, மே 3- இந்தாண்டு நீட் தேர்வுக்கு  அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக மானோர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்க ளுக்கு அவர் அளித்த பேட்டியில், “12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் படிப்பு தொடர்பான ஆலோசனை களை அந்தந்த பள்ளி ஆசிரியர்க ளிடம் பெறலாம். அரசுப்பள்ளி மாண வர்கள் அதிகமானோர் இந்தாண்டு  நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள னர்” என்றார். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம்  தேதி தொடங்கி, ஏப். 3ஆம் தேதி வரை  நடைபெற்றது. இதை தொடர்ந்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கள் மே 5ஆம் தேதி வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீட் தேர்வு நாடு முழுவ தும் மே 7ஆம் தேதி நடைபெறுவ தால், மாணவர்களிடம் தேவையற்ற  மன உளச்சலை தவிர்ப்பதற்காக பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, நீட் தேர்வு நடைபெற்று முடிந்த அடுத்த நாளான மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வரும் மே 8ஆம்  தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடு வார். பின்னர், தேர்வு முடிவுக ளுக்கான இணைய இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.