நேட்டோ எனும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்ற காலத்தில் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய நாடுகளின் கூட்டு பாதுகாப்பு அமைப்பாக உருவாக்கப் பட்டது . நேட்டோ 1949ல் உருவாக்கப் பட்டபோது 12 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. தற்போது 30 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன . சோவியத் யூனியன் வீழ்ந்து, பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் ,14 புதிய நாடுகள் உறுப்பு நாடுகளாக நேட்டோவில் இணைக்கப் பட்டன. நேட்டோ கிழக்கு நோக்கி விரி வடைந்து வந்தது, ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதித்தது. யுகோஸ்லாவியா, ஆப்கானிஸ் தான், லிபியா மற்றும் பல நாடுகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நலன்களை முன்னிறுத்தி நடைபெற்ற யுத்தங்களில் நேட்டோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற யுத்தத்திலும் நேட்டோ பங்காளியாக இருந்துள்ளது.
ஜூன் 28 -30- ல் நேட்டோவின் உச்சி மாநாடு ஸ்பெயின் தலைநகரம் மேட்ரிட்டில் நடைபெற்றது. ஜூன் 26 இல் மேட்ரிட் நகரில் 30 ஆயிரம் பேர், ‘நேட்டோ வேண்டாம், யுத்தம் வேண்டாம், அமைதி வேண்டும்’ என்ற பதாகைகளுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயினில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை காலி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் முழங்கினர். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் பிரிவு, உலக ஜனநாயக இளைஞர் களின் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஜூன் 29 வரை மேற்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறு வதை தடுத்திட ஸ்பெயின் அரசு தடை விதித்தது. இந்நிலையில், 2022 ஜூன் 24 -25ல் மேட்ரிட் மாநகரில் மேற்கண்ட அமைப்புகள், அமைதிக்கான உச்சி மாநாட்டையும் நடத்தின. யுகோஸ்லேவி யா முதல் ஆப்கானிஸ்தான் வரை அழிவை ஏற்படுத்திய நேட்டோ உலக அமைதி, சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது; நேட்டோ ஐநா சாசனத்தை மீறும் அமைப்பு; சீனா விற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக நேட்டோ புதிய பனிப்போரை தீவிரப்படுத்துவதால் நேட்டோ கலைக்கப்பட வேண்டும் என அமைதி உச்சி மாநாடு பிரகடனம் வெளியிட்டது. லண்டன் உள்பட பல ஐரோப்பிய நகரங்களில் நேட்டோவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நேட்டோவில் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்துகிறது. தெற்கு உலக முற்போக்கு அரசுகளுக்கு எதிராகவே நேட்டோ செயல்படுகிறது. மக்களின் உண்மையான தேவைகளான கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, சீரான எரி சக்தி ஆகிய கொள்கைகளுக்கு எதிராக உலகளாவிய ஆயுதப் போட்டியை நேட்டோ ஊக்குவிக்கிறது என அமைதிக் கான உச்சி மாநாடு கூறுகிறது
உலகின் மொத்த ராணுவ செல வினங்களில் நேட்டோவின் பங்கு 57 சத விகிதம் ஆகும். 2014 இல் நடைபெற்ற நேட்டோவின் உச்சி மாநாடு தீர்மானித்த வாறு, நேட்டோவின் உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் பாதுகாப்பிற்காக செலவிடுவதை நேட்டோ ஊக்கப்படுத்து கிறது. நேட்டோவின் மொத்த ராணுவ பட்ஜெட் 1 இலட்சம் கோடி டாலருக்கு மேல். ஒரு டாலர் 79 ரூபாய்க்கு சமம். நேட்டோ உச்சி மாநாடு உக்ரைன் யுத்தம் குறித்தும், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் புதிதாக நேட்டோ வில் சேர அனுப்பிய விண்ணப்பங்கள் குறித்தும் விவாதித்தது. பொதுவெளியில் ஒரு பிர கடனத்தையும் வெளியிட்டுள்ளது. இம் மாநாட்டில் உறுப்பினராக இல்லாத உக்ரைன் சார்பில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பங்கேற்றார். ஐரோப்பா வின் ஐந்து நேட்டோ உறுப்பு நாடுகளில் அமெரிக்க அணு ஆயுதங்கள் குவிக்கப் பட்டுள்ளன. போலந்து, ருமேனியாவிற்கு அருகிலே உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் இருந்து அணு ஆயுத ஏவு கணைகளை ஏவ முடியும்.
சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, அதன் தலைமையிலான வார்சா ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நேட்டோ கலைக்கப்படுவதற்கு பதிலாக தென் அமெரிக்காவின் கொலம்பியாவும் உறுப்பு நாடாக உள்ளது. ஆக்கஸ் AUKUS எனும் ஆஸ்திரேலியா, பிரிட்டன் அமெரிக்கா ராணுவக் கூட்டணி , குவாட் (QUAD) என்ற அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய ராணுவ கூட்டணியும் அமைக்கப் பட்டுள்ளன. உலகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன .அமெரிக்காவின் இராணுவத் தொழில் கூட்டமைப்பின் லாப வெறிக்காக உலக மக்களின் அடிப்படைத் தேவைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. தற்காப்பு அமைப்பு என நேட்டோ கூறிக் கொண்டாலும், உண்மையில் அது வளரும் நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் அமைப்பாகவே உள்ளது.