சென்னை, செப்.12- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல்துறையினர் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 5 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்திருந்த னர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதை தொடர்ந்து விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர் அவருக்கு மருத்துவ பரிசோத னையும் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு நேரில் சென்ற காவலர்கள் செப். 10 அன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வருமாறு அவருக்கு சம்மன் வழங்கினர். ஆனால் அன்று சீமான் ஆஜராகவில்லை. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, சீமான் 12 ஆம் தேதி காலையில் ஆஜராவார் என்று தெரிவித் திருந்தனர். அதன்படி சீமான் செவ்வாயன்று காலையில் வளசர வாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. நாம் தமிழர் கட்சியினர் வளசர வாக்கம் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். சீமானி டம் விசாரணை நடத்துவதற்காக காவலர்கள் காத்திருந்தனர். 11 மணிக்கு பிறகு சீமான் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை 10.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறி ஞர்கள் மட்டும் வந்தனர். சீமான் நேரில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து காவல் துறையினரை சந்தித்து விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- சில காரணங்களால் எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக முடிய வில்லை. இது தொடர்பாக விளக்க கடிதம் கொடுத்துள் ளோம். நடிகை விஜயலட்சுமி 2011-இல் அளித்த புகார் தொடர் பாக சமாதானமாக செல்வ தாக கூறியதையடுத்து வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப் பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆணையர் அலுவல கத்தில் அளித்துள்ள புகார் தொடர் பாக விசாரணை நடத்த நீதி மன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்று கேட்டு மற்றொரு கடிதம் கொடுத் துள்ளோம்.இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்ப தாக காவல்துறை தரப்பில் கூறி யுள்ளனர். மேலும் இது தொடர் பாக காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாராக உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.