நாகர்கோவில், ஜுன் 28- கன்னியாகுமரி மாவட்டம் குலசேக ரம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது அந்த குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இந்த மர்ம மரணம் குறித்து பெற்றோர் அளித்துள்ள புகா ரின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பொன் மனை அருகே முல்லைசேரிவிளை யைச் சேர்ந்தவர் சசிகுமார். ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளியான சசிகுமா ரின் மகன் அஜித் (22). இவர் சில நாட்க ளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மது போதை யில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர் பாக குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்கள் சிறையிலிருந்த பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அஜித், குலசேகரம் காவல் நிலைத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதை யடுத்து கடந்த 23ஆம் தேதி கையெ ழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல்நிலையம் சென்ற அஜித் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் குலசேகரம் காவல்நிலையத்திலிருந்து அஜித்தின் வீட்டிற்கு சென்ற போலீசார் விஷம் அருந்தி அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது தந்தை சசிகுமாரை அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆசா ரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்தார். இதையடுத்து தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் உயிரிழப் பிற்கு குலசேகரம் போலீசாரே கார ணம் எனக் கூறி அஜித்தின் தந்தை சசி குமார், புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஜாமீன் நிபந்த னையின் பெயரில் காவல் நிலையம் சென்ற அஜித் அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. லாக்கப் படுகொலைகள் நடப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் இத்தகைய மர்ம மர ணம் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரி விக்க வேண்டும். காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.