மும்பை, ஜன.20- மகாராஷ்டிராவில் 106 நகர்ப் பஞ்சாயத்துகள் மற்றும் 2 ஜில்லா பரிஷத்களுக்கு நடை பெற்ற தேர்தல்களில், காங்கி ரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா விகாஸ் அகாதி’ (MVA) கூட்டணி பெரும்பான்மை யான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 378 வார்டுகளையும், சிவசேனா 301 வார்டுகளையும், காங்கிரஸ் 297 வார்டுகளையும் கைப் பற்றி ஒட்டுமொத்தமாக 976 வார்டுகளில் வென்றுள்ளன. முடிவு கள் வெளியான 97 நகராட்சிகளில் 57 நகராட்சிகளைக் கைப்பற்றி யுள்ளன. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 25 நகர்ப் பஞ்சா யத்து, காங்கிரஸ் 18 நகர்ப்பஞ்சாயத்து, சிவசேனா 14 நகர்ப்பஞ்சா யத்து என பகிர்ந்து கொண்டுள்ளன.
பாஜக 416 வார்டுகளை கைப்பற்றியதன் அடிப்படையில் 24 நகர்ப் பஞ்சாயத்துகளை மட்டுமே பிடித்துள்ளது. மற்றவர்கள் 262 வார்டுகளையும் 16 நகர்ப்பஞ்சாயத்துகளையும் கைப்பற்றி யுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியை மூன்றரை மாவட்டங்கள் கொண்ட கட்சி என்று கூறும் பாஜக-வுக்கு, தேர்தல் முடிவுகள் மூலம் எங்கள் தொண்டர்கள் தகுந்த பதிலை அளித்துள்ளனர் என்று என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். பண்டாராவில் என்சிபி தோற்கடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பாஜக கோட்டையாகக் கருதப்படும் விதர்பாவில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது, கொங்கனில் கணக்குத் திறந்துள்ளது, இதன் காரணமாக காங்கிரஸ் திருப்தி அடைந்துள்ளது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார். அதேநேரம், பாஜக-தான் நம்பர் ஒன் கட்சி என்று கூறி, அக்கட்சி யின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தனக்குத்தானே ஆறு தல்பட்டுக் கொண்டுள்ளார்.