சென்னை, ஜூன் 9- தமிழகம் முழுவதும் பள்ளிகள் வருகிற 13 ஆம்தேதி திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறையில் வெளியூர் சென்று இருந்த பெற்றோர், குழந்தைகள் பள்ளிகள் திறப்ப தால் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில் அரசு பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆம்னி பேருந்துகள் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கோவை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளும், அங்கி ருந்து சென்னைக்கு வரக்கூடிய பேருந்துகளி லும் தேவை அதிகரித்து வருவதை அறிந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்ட னர். மதுரையிலிருந்து சென்னை வருவதற்கே ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகி றது. குளிர்சாதன படுக்கை கட்டணம் ரூ.1,600 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக ளுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலும் குளிர்சாதன இருக்கை வசதிக்கு ரூ.1,500 கட்டணமும் பெறப்படுகிறது. தூத்துக்குடி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.3000 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,300 முதல் 1,750 வரைக்கும் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. குளிர் சாதன வசதி அல்லாத படுக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண இருக்கைக்கு ரூ.1000 முதல் 1,500 வரை வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,050 வரையும் ஏ.சி. அல்லாத படுக்கை மற்றும் இருக்கைக்கு ரூ.1,300 முதல் ரூ.1,800 வரை வசூலிக்கிறார்கள். இக்கட்டணம் அந்தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துளில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக் கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.