states

பே-சிஎம் விளம்பரத்தை அடுத்து ‘போன்பே சிஎம்’ முழக்கத்தைக் கையிலெடுத்த காங்கிரஸ்..!

போபால், ஜூன் 30 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி, காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த ‘பே-சிஎம்’ என்ற நூதன சுவரொட்டி விளம்பரத்தை செய்து, பாஜக-வினரை அலறவிட்டது.  கமிஷன் பெற்றுக்கொண்டு சேவை யாற்றும் ‘பேடிஎம்’ செயலி போல முதல்வர் பசவராஜ் பொம்மை ஒரு ‘பே-சிஎம்’ என்றும் அந்த சுவ ரொட்டியில் விமர்சிக்கப்பட்டிருந்தது. கர்நாடக பாஜக முதல்வரான பசவராஜ் பொம்மை ஆட்சியில் 40 சதவிகித கமி ஷன் கொடுத்தால்தான் அரசு காண்ட்ராக்டுகளும், அரசு வேலை வாய்ப்புக்களும் கிடைக்கிறது என்பதையே இவ்வாறு ‘பே-சிஎம்’ மூலம் காங்கிரஸ் அம்பலப்படுத்தியது. இந்த சுவரொட்டிக்கு மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பும் கிடைத்தது. இதனிடையே, வரவிருக்கும் மத்தி யப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இதேபோன்ற பிரச்சா ரத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. ஆனால், இந்த முறை, ‘பேடிஎம்’-மிற்குப் பதிலாக, ‘போன்பே’ செயலி யைக் கையில் எடுத்துள்ளது. 

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அரசுப் பணிகளை முடித்துக் கொடுப்பதற்கு 50 சதவிகித  கமிஷன் வாங்குவதைச் சித்தரிக்கும் வகையில் ‘போன் பே’ சுவரொட்டி களை ஒட்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் கமல்நாத் படம் மற்றும் பெயரை போஸ்டரில் அச்சடித்து, ‘தேடப்படுவோர்’ எனக் கூறி, பாஜக-தான் முதலில் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது. இதற்குப் பதிலடியாகவே, ‘போன்பே’ பெயரை சுவரொட்டியை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  இதற்கும் மக்கள் மத்தியில் வர வேற்பு கிடைத்த நிலையில், எப்படி யாவது இந்தப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று பாஜக துடியாய் துடித்தது. இதன் பின்னணி யில், ‘போன்பே’ நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுதியுள்ளது.  அதில், ‘போன்பே’ நிறுவனம் எந்தவொரு கட்சி சார்பும் உடையதல்ல; என்று கூறியிருப்பதுடன், போன்பே- பெயர் மற்றும் லோகோவை அனு மதியின்றி பயன்படுத்தினால், சொத்துரி மை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்த தோடு, போன்பே சித்தரிப்பிலான சுவரொட்டி களை அகற்றுமாறும் எச்சரித்துள்ளது.