states

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் விவகாரம்: மின்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை,மார்ச் 9-  ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கு  மேற்பட்ட மின் இணைப்பு உள்ளது  தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சாலை யிலுள்ள மின்சார வாரிய அலுவல கத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வியாழனன்று (மார்ச் 9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2.60 கோடி பேர் இணைத்துள்ளனர். 67 ஆயிரம் பேர்  இன்னும் இணைக்க வில்லை. இவர்க ளின் வீடுகளுக்கு சென்று இணைக்கும்  பணிகள் நடைபெற்ற வருகிறது. ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ள வர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. சில பகுதிகளில் அதிகாரிகள் இதனைத்  தவறாக புரிந்துகொண்டு தன்னிச்சை யாக செயல்பட்டுள்ளனர். மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கை யும் வழங்கப்படவில்லை. திருச்சி மாவட்டம், திருவெறும்பூ ரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின் துறை அதிகாரிகள் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

100 யூனிட் இலவசம் தொடரும்

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில்  உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றி ணைக்கவே ஆதார் எண் பெறப்படு கிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்  தாலும், அனைத்து மின் இணைப்பு களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். திமுக ஆட்சியில்,  ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.  தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல்  நாள் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப் படும் என அறிவித்துவிட்டு அரசாணை  வெளியிடப்பட்டது.  ஆனால், அதிமுக  ஆட்சி 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது. 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்கு வதற்கான கட்டமைப்பு பணிகளை திமுக ஆட்சி செயல்படுத்தி வருகிறது.  அடுத்த ஆண்டு கோடைக் காலம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேர மும் மும்முனை மின்சாரம் வழங்கப் படும். தமிழ்நாட்டில், கோடை காலம் துவங்க உள்ள நிலையில் மார்ச், ஏப்ரல்,  மே ஆகிய மாதங்களில் தலா 1565  மெகாவாட் கூடுதலாக பெற ஒப்பந்தம்  விடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கோரப்படு வதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 8 ரூபாய்க்கு பெற முடியும். தமிழ் நாட்டின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 2030-க்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.