பீகார், ஜார்க்கண்ட் மாநி லங்களில் ஏப்ரல் மாதத் தில் மட்டும் 2.25 லட்சத் திற்கும் அதிகமான மொபைல் போன் எண்கள் நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தொலைத் தொடர்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டு எண்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்து ள்ளது.
உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனமான சிஸ்கோ (Cisco) இந்தியா வில் தனது கால்தடத்தை விரிவுபடுத்தும் நோக்கத் தில், தமிழ்நாட்டில் உற்பத்தியைத் தொடங்கு வதாக அறிவித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோ பர்ஸ்ட் (Go First) விமான நிறு வனம் மே 19 வரை அனை த்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறி வித்துள்ளது. விமான முன்பதிவு செய்த பயணி களின் முழுமையான பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கோ பர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள் ளது.
தில்லியில் அடுத்த மூன்று நாட்களில் அதிக பட்ச வெப்பநிலை 42 டிகி ரியை எட்டக்கூடும் என் றாலும், வெப்பஅலை க்கு சாத்தியமில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி காரண மாக அமெரிக்காவின் பிர பல ஊடக நிறுவனமான எம்டிவி (MTV) நிறு வனத்தை மூடுவதாக அதன் தாய் நிறுவனமான பாரமவுண்ட் குளோபல் அறிவித்துள்ளது.
டுவிட்டரில் விரைவில் வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவன தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள் ளார். டுவிட்டரின் இந்த திட்டம் மூலம் தொலை பேசி எண்களை அளிக்கா மல் பொதுவாக வாய்ஸ் மெசேஜ் மற்றும் வீடியோ கால் பேசலாம்.
மகா மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னி ட்டு மே 31 அன்று (புதன் கிழமை) கரூர் மாவட்டத் திற்கு உள்ளூர் விடு முறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். இதற்கு மாற்றாக ஜூன் 03 அன்று கரூர் மாவட்டத்திற்கு வேலை நாளாக அறி விக்கப்பட்டுள்ளது.
ரூ.8500 கோடி செல வில் தயாராகும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தி ற்காக வைகை ஆற்றில் மண் பரிசோதனை செய்யப்பட்டது.
வியாழனன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளி யாவதாக சமூக வலை தளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என சிபிஎஸ்இ நிர்வா கம் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மத்தியதரைக் கடலுக்கு அடியில் 7000 ஆண்டு கள் பழமையான சாலை யின் மூழ்கிய இடிபாடு களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகச் செய்திகள்
பாலஸ்தீனப் பகுதியான காசாத் திட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். மேலும் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ள னர். காசாத் திட்டின் மீது போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் ஒரு குடியிருப்பின் மேல்மாடி கடுமையாகச் சேதமடைந்தது. காசா நகரின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. அருகில் உள்ள ரஃபா மற்றும் கான் யூனிஸ் ஆகிய இரு நகரங்களும் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாகின.
தட்டம்மை நோயை எதிர்கொள்ள 55 ஆயிரம் தடுப்பூசிகளை லிபியாவுக்கு யுனிசெப் வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் தற்போது பெரும் அளவில் தட்டம்மை நோய் தாக்கியுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதி கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. லிபியாவின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்தத் தடுப்பூசிகளை வாங்கியதாகவும், கடந்த வாரத்தில் தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருந்ததாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 14 ஆம் தேதியன்று துருக்கியின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வரும் நேரத்தில் தற்போதைய ஜனாதிபதியும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளருமான எர்டோகன், அரசு ஊழியர்களின் ஊதியத்தை 45 விழுக்காடு அதி கரிப்பதாக அறிவித்திருக்கிறார். வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில், 7 லட்சம் அரசு ஊழியர்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.