கடந்த 6 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் மிகக்குறைவாக உள்ளது என மோடி அரசு பொய்யுரைத்து கொண்டிருக்க ஜூலை 2022- ஜூன் 2023 க்கு இடையே மாத ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளின் விகிதம் கணிசமாக வீழ்ச்சி என NSO தரவுகள் வெளிவந்துள்ளன. வாய்ப்பந்தலுக்கு எல்லையில்லை! அதுமட்டுமல்ல, வேலைவாய்ப்பின் தரமும் நாட்டின் 21 பெரிய மாநிலங்களில் 12-லும் யூனியன் பிரதேசங்களிலும் மிக மோசமான முறையில் சீர்குலைவை சந்தித்துள்ளது. தேசிய அளவில் உத்தரவாதமான சம்பளத்துடன் தினசரி வேலை கிடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 21.5 சதவீதத்தில் இருந்து 20,9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.மோடியின் படாடோப பிரச்சாரத்தின் லட்சணம் இதுதான்.