25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்ட மோடி அரசு!
சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையங்களும் பட்டியலில் உள்ளன
புதுதில்லி, டிச. 19 - தேசிய பணமாக்கக் கொள்கையின் அடிப்படையில், இந்திய விமான நிலையக் கழகத்துக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, திருப்பதி, வாரணாசி, போபால், சூரத், மதுரை, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022-ஆம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தவிர, இந்திய விமான நிலையக் கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்பட 8 விமான நிலையங்களை பொதுத் துறை - தனியார் கூட்டமைப்பில் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் திட்டங் களை நீண்டகாலத்துக்கு மேற்கொள்ளும் வகையிலான குத்தகையில் இயக்கி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்குள் சாவர்க்கர் படத்தை திறந்த பாஜக அரசு!
பெலகாவி, டிச. 19 - கர்நாடக மாநில சட்டப்பேரவையின் குளிர் கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. சட்டப்பேரவைக்குள், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், ஜகத்ஜோதி பசவன்னா உட்பட ஏழு தலைவர் களின் படங்களை, பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். இந்த படங் களுக்கு ஊடே சாமர்த்தியமாக சாவர்க்கர் பட மும் நுழைக்கப்பட்டிருந்தது. இது எதிர்க்கட்சி களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆவேசமடைந்த அவர்கள், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில் சட்டப்பேரவைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சித்தராமையா, ‘‘கர்நாடகம் முழுவதுமே பாஜகவினர் இந்துத் துவத்தை கட்டவிழ்த்து வருகின்றனர். காந்தியின் கொலையில் தொடர்புடைய, சர்ச்சைக்குரிய நபரான சாவர்க்கர் படத்தை சட்டப்பேரவையில் வைக்க எந்தத்தேவையும் இல்லை. மேலும், எதிர்க்கட்சியான எங்களிடம் படங்கள் வைப்பது குறித்து தகவலையும் தெரி விக்கவில்லை. பாஜக-வின் 40 சதவிகிதம் கமிஷன், ஊழல் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவோம் என்பதற்காக, சாவர்க்கர் படத்தை வைத்து, பிரச்சனைகளை திசைத் திருப்ப முயன்றுள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தானில் ஏப்.1 முதல் ரூ.500-க்கு சமையல் சிலிண்டர்!
ராஜஸ்தானில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ் வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க உள்ளதாக காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அசோக் கெலாட், “உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்பு கள் மற்றும் எரிவாயு அடுப்புகளை வழங்குகிறார். ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காலியாகவே உள்ளன” என்றும் விமர்சித்துள்ளார்.
ராணுவம் பலமானது; மோடி அரசுதான் பலவீனமானது!
இந்திய - சீன எல்லையான அருணாசலப் பிரதேச தவாங் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கி டையே ஏற்பட்ட மோதல் குறித்து, மோடி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரு கின்றன. அந்த வகையில், மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் மோடி அரசை விமர்சித்துள்ளார். ‘’நாட்டின் ராணுவம் பலம் மிக்கது. ஆனால், அரசு மிகவும் பலவீனமானது. அதனால் சீனாவிற்கு பயப்படுகிறது” என்று ஒவைசி கூறியுள்ளார்.
உத்தரகண்டில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்!
உத்தரகண்டில் திங்களன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் அதிகாலை 1.50 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில வாரங்களாக வட மாநிலங்க ளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிப்பதாக மோடி அரசு காமெடி!
நாடு முழுவதும் டிசம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை ‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிக்க ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், தாலுகா அளவில் முகாம் களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், 700-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்வார்கள். உயர் அதிகாரிகள் தாலுகா தோறும் சென்று குறைதீர்ப்பு முகாம்களில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக-மகாராஷ்டிரா மோதல்: மோடி மத்தியஸ்தம் எங்கே?
“ரஷ்யா - உக்ரைன் போரில் பிரதமர் மோடி மத்தியஸ்தம் செய்கிறார். ஆனால் மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லை பிரச்சனையில் கண்ணை மூடிக் கொள்கிறார். இது ஒரு நல்ல அரசி யல்வாதியின் அடையாளம் அல்ல. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முன்முயற்சி எடுத்தது நல்லது. ஆனால் ஒன்றிய அரசு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்குமா? என்பது கேள்வியாக உள்ளது” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
‘சீனாவின் பெயரை கேட்டாலே பிரதமர் ஓடி ஒளிகிறார்’
“நாடாளுமன்றத்தில் சீன விவகாரம் குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பாது காப்புத்துறை அமைச்சர்தான் இதுகுறித்து பேசுகிறார். ஆனால் பேச வேண்டியதோ பிரத மர்தான். நாட்டு மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். சீனா என்ற பெயரைக் கூட கூறா மல் பிரதமர் அமைதி காக்கிறார். அந்த பெயரை சொல்லவே பிரதமர் பயப்படுகிறார். பிரதமருக்கு சீனாவுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது. குஜராத் முதல்வராக மோடி தேர்ந்தெ டுக்கப்பட்டது முதலே சீனாவுடன் உறவு தொடங்கிவிட்டது’’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்எல்ஏவை பாஜகவுக்கு இழுக்க ரூ.15 கோடி லஞ்சம்!
பாஜக எம்எல்சி-யாக இருக்கும் விஸ்வநாத், முன்பு மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்திருந்தார். இதையொட்டி அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக ரூ. 15 கோடி வழங்கியதாகவும், விஸ்வநாத் அந்த பணத்தை தேர்தலில் செலவழிக்காமல், பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட சொந்த தொழிலுக்கு பயன்படுத்தினார் என்றும் சீனிவாஸ் பிரசாத் என்ற பாஜக எம்.பி. ஒருவரே தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாஜகவில் சேர விஸ்வநாத்திற்கு ரூ. 15 கோடி லஞ்சம் தரப்பட்டது அம்பலமானது. இதையடுத்து, சீனிவாஸ் பிரசாத், விஸ்வநாத், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரான பிரசாந்த் லோக் ஆயுக்தா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சீன விவகாரத்தில் தொடரும் மோடி அரசின் பிடிவாதம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுதில்லி, டிச.19- சீனா உடனான எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க, மோடி அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், திங்கட்கிழமையன்றும் எதிர்க்கட்சிகள் அமளி - வெளிநடப்பில் ஈடு பட்டன. திங்களன்று (டிசம்பர் 19) நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் கூடிய உடனேயே சீனா உடனான எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, சையத் நசீர் உசேன் உள்ளிட்டோரும், மக்களவையில் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் நோட்டீஸ் அளித்தனர். எனினும் வழக்கம்போல அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கையை புறக்க ணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்தன. எதிர்க்கட்சிகளின் அமளி கார ணமாக அவை நடவடிக்கைகள் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பொங்கல் பரிசு தொகுப்பு : முதல்வர் ஆலோசனை
சென்னை, டிச.19- பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்களன்று (டிச.19) ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட் களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப் பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு எவ்வாறு இருக்க வேண்டும், அதை எவ்வாறு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பரிசுத் தொகுப்பு டன் ரொக்கமாக ரூ.1000 வழங்கு வது தொடர்பாகவும் இதில் விவாதிக்கப் பட்டது.
ஆளுநர் மாளிகையில் விழுந்த பலூன்
சென்னை,டிச.19- சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இதன் உள்ளே செல்ல முடியும். அங்கு பணி செய்பவர்கள்கூட பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர். இந்நிலையில், ஆளுநர் மாளிகைக்குள் பலூன் போன்றதொரு மர்ம பொருள் காற்றில் பறந்து வந்து விழுந்துள்ளது. இதையடுத்து பாது காப்பு பிரிவு காவலர்கள் மற்றும் கிண்டி காவலர்கள் அங்கு விரைந்து சென்று மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது, வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட சென்சார் பொருத்திய பலூன் என்றும், அது காற்றின் வேகம் குறைந்ததால் ஆளுநர் மாளிகை மைதா னத்தில் விழுந்ததும் தெரியவந்தது.
தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமேசுவரம்,டிச.19- ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என எச்சரித்த தோடு 10-க்கும் மேற்பட்ட படகு களில் வலைகளை அறுத்து கடலுக் குள் மூழ்கடித்தனர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த மீனவர்கள், மீன் பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இதுகுறித்து செய்தியாளர் களிடம் மீனவர்கள் கூறுகையில், “டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளது. கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்குச் சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தாக்கு தல் நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”என்றனர்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம்: அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை
சென்னை,டிச.19- காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்க ளும், 2000-க்கும் மேற்பட்ட குடியி ருப்புகளும் கையகப்படுத்த உள்ள னர். இதனையடுத்து, சில நாட்க ளுக்கு முன்பு பரந்தூர் விமான நிலை யம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறு வனம் (டிட்கோ) ஒப்பந்தம் கோரி யது. ஆனால், நிலம் கையகப்படுத்து தல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கை குறித்து தலைமைச் செயல கத்தில் அமைச்சர்கள் குழு செவ்வா யன்று (டிச.20) ஆலோசனை நடத்து கிறது. இதில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு, இந்த பிரச்சனை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் தென் கொரியா
சியோல், டிச.19- தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் தென் கொரியா மேலும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமான தென் கொரியா, வரும் ஆண்டில் வெறும் 2 விழுக்காடு பொருளா தார வளர்ச்சியையே அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அந்நாட்டின் நிதியமைச்சர் சூ கியுங்-ஹோ, “உலக அளவில் பெரும் பொருளாதார சரிவு ஏற் பட்டுள்ளதால் வரும் ஆண்டின் பொருளா தார வளர்ச்சி குறைவாகவே இருக்கப் போகிறது. அடுத்த ஆண்டில் முதல் பாதியில் சிரமங்களை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார். பொருளாதார வளர்ச்சி குறையும் என்பதை எதிர்பார்த்தே இருந்தார்கள். ஆனால், சரிவு இவ்வளவு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு பொரு ளாதார நிலை பற்றி விளக்குகையில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். விற்பனை வரியில் விலக்கு அளிப்பதற்கான அறி விப்பையும் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென் கொரியாவின் பொருளாதாரம் கார்கள் முதல் கப்பல்கள் வரையிலும், மறுபுறத்தில் மின்னணு கருவிகளை உருவாக்குவதிலும் பெயர் பெற்றதாகும். இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமே தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்து வருகிறது. அதன் மிகப்பெரிய சந்தையான சீனா இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைத்துள்ளது. இது தென் கொரியாவின் நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது.