states

மணிப்பூர் வன்முறைகளை ரசித்தவர் மோடி

குமரி மாவட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ இதர ஜனநாயக அமைப்புகளோ ஒரு அறிவிப்பு பதாகை வைத்தால் தூக்கிச் செல்லும் காவல்துறை, அண்ணாமலையின் நடை பயணத்தில் பாஜகவின் பணக் கொழுப்பு விளம்பரங்களாக வழிகிறபோது மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக ஒன்றிய கவுன்சிலர் சாவர்கர் என்பவர் பெண் களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே, அவர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்  பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை அதன் மீது நடவடிக்கையை தொடரவில்லை. அந்த தைரி யத்தில் அவர் பொதுமக்கள் முன்னிலையில் நடு  ரோட்டில் ஒரு பெண்ணின் வயிற்றில் எட்டி உதைக்கிறார். அவரை இன்னும் கூட காவல்துறை கைது செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் பாஜகவினர் 7 அரசுப் பேருந்துகளை சேதப்படுத்தினார்கள். அப்போது, டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஏன்?

புனுகு தடவினாலும்...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த மாவட்டத்திற்கு வந்து ஊழலுக்கு எதிராகப் பேசி சென்றிருக்கிறார். ஊழலுக்கு எதிராகப் பேசிய அந்த கட்சி இன்று ஊழலின் அடையாள மாகக் காட்சி அளிக்கிறது. இதில் வேறெந்த கட்சி யையும் அதற்கு இணையாக பார்க்க முடியாது. அவருக்கும் இருக்கும் ஊடக செல்வாக்கை வைத்து சமாளித்து வருகிறார்கள். புண்ணுக்கு எவ்வளவுதான் புனுகு தடவினாலும் நாறத்தான் செய்யும். மோடியே ஊழல் தான் என்றாகிவிட்டது. மோடி என்பதே ஊழலின் மொத்த உருவம்தான். அவர் உருவாக்கிய பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பொருள் ஈட்டும் வாய்ப்பாக நாட்டில் ஏற்படும் பேரிடர்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். பிரபல ஊடகவியலாளர் சாய்நாத், ஒரு வறட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எவ்வாறு கொண்டாடத்தக்கதாக மாறிவிடுகிறது என்பதை விளக்கி எழுதினார். இந்தியாவில் எது  நடந்தாலும் மோடிக்கு அதுதான். பி எம் நிவாரண நிதி என்பதால் பொதுத்துறை நிறுவனங்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பெருந் தொகையை அதற்கு அளித்தார்கள். அதை யாருக்கு கொடுத்தார் என்பதற்கு இன்றுவரை கணக்கு காட்டவில்லை.  

கமிஷனைக் குழைத்து பாலம் கட்டுபவர்கள்

குஜராத்தில் 2016 முதல் 2022 வரை ஆறு வருடத்தில் 12 பாலங்கள் புதிதாக கட்டப்பட்டன. இவை இடிந்து விழுந்தன அல்லது மாவட்ட நிர் வாகத்தால் இடித்து அகற்றப்பட்டுள்ளன. ஜுன்  6 ஆம் தேதி தி இந்து ஆங்கில பத்திரிகை யில் நடுப்பக்க கட்டுரையாக இது வெளிவந்துள் ளது. எல்லோரும் சிமெண்டை குழைத்து பாலம் கட்டினால் இவர்கள் முழுக்க முழுக்க கமிஷனை குழைத்துக் கட்டுகிறார்கள். 18 கோடி ரூபாய் மதிப்பிலான துவாரகா சாலைக்கு 250 கோடி ரூபாய் செலவழித்துவிட்டு எந்த கூச்சம் இல்லா மல் ஊழல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் தனியார் மின் நிலையங்கள் அதிகம். மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போன்றவற்றுக்கான தொகையை மின் துறை வழங்கும். அந்த வகையில் ஒரு நிறுவனம் திருப்பித் தரவேண்டிய தொகை 3,900கோடி ரூபாய். ஆனால், அந்த நிறுவனம் வழங்கியிருப் பது வெறும் 18 கோடி ரூபாய். குஜராத் அரசு இப்படி அள்ளிக் கொடுத்திருப்பது மோடியின் நண்பரான அதானியின், அதானி பவர் முந்த்ரா  என்கிற நிறுவனத்துக்கு. இது ஊழல் இல்லையா என்பதை பாஜகவினர் விளக்க வேண்டும். 

முழுமையான இன அழிப்பு

மணிப்பூர் வன்முறையில் கிறித்தவ தேவா லயங்கள் இடிக்கப்பட்டன.  5000 வீடுகள் எரிக்கப்பட்டன. படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. 160 பேர் இறந்த னர். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து  பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். பெண் களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தினர். அப்போதெல்லாம் அவற்றைப் பார்த்து மோடி ரசித்தார். இழவு வீட்டில் கொண்டாடும் மனநிலை யில் மோடி இருந்தார் என்பதை அவரது நட வடிக்கைகள் காட்டுகின்றன. அதனால்தான் மணிப் பூர் குறித்து நாடாளுமன்றத்தில்கூட பேச மாட்டேன் என்று பிடிவாதம் செய்தார் மோடி. மணிப்பூரின் தலைநகர் இம்பால். அங்கி ருந்தால் பாதுகாப்பு இருக்காது என்று கூறி கடைசி யாக இருந்த 10 பழங்குடி குடும்பங்களை காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். மணிப்பூரில் நடந்தது ஒரு முழுமையான இன அழிப்பு என்பதை அழுத்தமாக இந்தச் செய்தி கூறுகிறது. இதுதான் அவர்களது தேர்தல் பிரச்சாரம். இந்தி யா என்கிற மகத்தான இயக்கம் எதிர்க்கட்சி களால் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களையும்,  நாட்டையும் பாதுகாக்க நடக்கும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

நாகர்கோவிலில் ஞாயிறன்று சிபிஎம் நடத்திய மக்கள் கோரிக்கை மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதில் இருந்து...