states

கேரளத்தின் வளர்ச்சியை முடக்கும் ஒன்றிய அரசு பினராயி விஜயன் தலைமையில் புதுதில்லியில் போராட்டம்!

திருவனந்தபுரம், ஜன. 16 - கேரளத்தின் வளர்ச்சியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சி களுக்கு எதிராக புதுதில்லி ஜந்தர் மந்தரில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் மாபெரும் வெகுஜன போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்த அறிவிப்பை செவ்வா யன்று (ஜன.16) இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளர் இ.பி. ஜெய ராஜன் திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.  கேரளம் பொதுவாக பொருளா தாரச் சிரமங்களை சந்திக்கும் ஒரு மாநி லமாகும். திட்டமிட்ட முறையான நடவடிக்கைகள் மூலம் கேரளம் அதை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு இந்த மாநிலத்திற்கு உரிய பங்கீட்டை வழங்காமல் நெருக்கடி ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதன் மூலம் இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை சீரழிக்க முயற்சிக்கிறது.  எனவே, இதற்கு எதிராக புதுதில்லி யில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சர்கள், எம்.பி. - எம்எல்ஏ-க்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். புதுதில்லி கேரளா ஹவுசில் இருந்து முதல்வர் தலைமை யில் ஊர்வலம் நடைபெறும். அதன் முடிவில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும்.  இந்தப் போராட்டம் கேரள மக்கள் அனைவருக்குமானது. இதில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும். அதையொட்டி அன்றைய தினம் கேரளத்தில் வாக்குச்சாவடி அளவில் மக்கள் சந்திப்பும் வெகுமக்கள் பங்கேற்கும் போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு இ.பி. ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.