சென்னை,ஜூன் 22- ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆர்.என். ரவி, “வள்ளலாரின் சன்மார்க்க நெறியையும் சனாதன போர்வைக்குள் புகுத்த முயல்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்ன ரசு குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு வந்த நாள் முதல் இந்துத்துவா, சனாதன கருத்துக்களை பரப்பி மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டு வரு கிறார். குறிப்பாக, ஆளும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளையும் சாடி வரும் அவர், பாஜகவின் ஊது குழலாக மாறி ஆர்.எஸ்.எஸ் ரவியாக வலம் வந்து கொண் டிருக்கிறார். கடலூர் மாவட்டம், வட லூரில் நடைபெற்ற வள்ள லார் 200-வது விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ``10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். `வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்னும் வள்ளலார் வரிகள் சனாதன தர்மத்தின் எதி ரொலி. நமது பாரதம் சனா தன தர்மத்தால் ஆனது” என்று பேசியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி யின் வள்ளலார் குறித்த இந்த பேச்சு மீண்டும் கடும் கண்டனத்தை எழுப்பியி ருக்கிறது. ஆளுநரின் இத்தகைய பேச்சால் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு, ஆளு நர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தி ருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சமரச சுத்த சன் மார்க்க நெறிக்கும், சனா தன தர்மத்துக்குமான அடிப் படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வட லூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறை களை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், `தர்ம ரட்சகராக’ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கிறார்
தமிழ்நாடு ஆளுநர். தமிழ் பண்பாடும், விழு மியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண் டவை என்பதை பல்லாயி ரமாண்டு தமிழ்ச் சமூக நாக ரிக சுவடுகள் நமக்கு வெள் ளிடை மலையாக உணர்த்தி வருகின்றன. ஒன்றிய அரசின் `தனிப்பெருங் கருணை’ ஏதோ ஒரு விதத் தில் வாய்க்கப்பெற்று விட்ட தாலேயே ஆளுநர் மாளி கையை சனாதனக் கூடார மாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிரா கரிக்கப்பட வேண்டியவை” என்று பதிலடி கொடுத்திருக் கிறார். ஆளுநர் முயற்சிக்கு திருமா. கண்டனம் “ஆர்.என்.ரவி ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டன்.., சனாதன அடிப்படைவாதி… சாதி,சமயம், மீது நம்பிக்கை இல்லாதவர் வள்ளலார். வள்ளலார் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் சனா தன சக்தியாக மாற்றுகிற முயற்சியில் ஆளுநர் இறங்கியுள்ளார்” என்று விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திரு மாவளவன் தெரிவித்திருக்கி றார். ஆளுநரின் கருத்து தவ றானது என்று கூறியுள்ளார்.
வள்ளலார் மதத்திற்கு அப்பாற்பட்டவர்: ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஆளுநரின் கருத்து முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். வள்ளலார் என்பவர் ஆன்மீகம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிறுவியவர். அவருடைய முக்கியமான பாடல்களுக்கு அருட்பா என்றுதான் பெயர். இந்த அருட்பாவினுடைய அடிப்படை நாதமே, மக்கள் மீது இருக்கும் அன்புதான். அதனால் பசி, பிணி, மருத்துவனே என் கடவுள் என்று சொன்ன வள்ளலாரை சனாதன குறியீடாக சுருக்குவது மிக மிக தவறானது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கொண்டுவரும் சனாதனமும், வள்ளலார் பசிப்பிணியை போக்கும் மருத்துவனே கடவுள் என்ற கொள்கையும் எப்படி ஒன்றாக இருக்கும். வடலூரில் அவர் உருவாக்கிய சன்மார்க்கம், ஆளுநர் கூறியிருக்கும் சனாதனம் இரண்டும் வேறு வேறு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் குறித்த ஆளுநரின் இந்த கருத்து முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.