states

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என நிர்மலா சீதாராமன் பேசக் கூடாது!

சென்னை, நவ. 22 - “தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடி வரு கிறார்கள். கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத்  தெரியவில்லை” என ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங் கானா மாநிலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார் இதற்கு தமிழ்நாடு இந்துசமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக கேட்கவும், அதற்கு பதில் அளிக்கவும் தமிழ்நாடு அறநிலையத்துறை தயாராக உள்ளது. இந்து சமய அறநிலை யத்துறைக்கு அதிக மானியம் வழங்கிய ஆட்சி என்றால், அது தற்போதைய திமுக  ஆட்சிதான் என்பதை அந்த உயர் பொறுப்பில் இருக்கும் அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டும்.  5 ஆயிரம் திருக்கோவில்களில் திருப்பணிக்காக 100 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 290, புதுக்கோட்டை 270, கன்னியாகுமரி 400 மேற்பட்ட தேவஸ்தானங்களுக்கு அரசு  மானியம் வழங்கப்பட்டு வருகின்றன.  

8001 திருக்கோயில்களுக்கு மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் 1000 கோயில்களுக்குத்தான் கிடைக்கும். தெய்வங்களையும் தெய்வத்திற்கு சொந்தமான இடங்களையும் பாதுகாத்து, திருப்பணிகளை வழங்கிய ஆட்சி இது. மாறாக, இறைச் சொத்தை களவாடும் ஆட்சி இது இல்லை, பாதுகாக்கும் ஆட்சி. திமுக ஆட்சி ஏற்பட்ட பின் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக் கள் மீட்கப்பட்டுள்ளன. 200 உலோக சிலை கள், 100 கற்சிலைகள் என மொத்தம் 400 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்க, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது சரி அல்ல. உயர் பொறுப்பில் இருப்ப வர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூ பித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு பி.கே. சேகர் பாபு  குறிப்பிட்டுள்ளார்.