சென்னை, செப்.11- “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக் குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது என்று தமிழக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சைதாப்பேட்டையில் திங்களன்று (செப்,11) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் மரணம் அடைந்திருக்கிறார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை வரை டெங்கு பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனை களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருப்பவர்களின் எண்ணிக்கை 253 பேர். இந்த 253-ல், கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மருத்துவமனைகளில் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 121 பேர். தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பில் கூடுத லாக கவனம் செலுத்த வேண்டும் என்ற வகையிலும், இறப்பு இல்லாத நிலையை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலும், செவ்வாயன்று (செப்.11) தலைமைச் செயலாளர் தலை மையில் உயர் அலுவலர்களுக்கான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது” என்று அவர் கூறினார். பொதுமக்கள் புகார் சென்னை மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிறு வனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கள் போராட்டத்தை கைவிட்ட னர். அப்பகுதிக்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வீட்டின் கதவுகளில் ஒட்டினர். அப்பகுதி மக்கள் கூறு கையில், “இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால், குடிநீர் தொட்டி களில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம். கடந்த சில தினங்க ளாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுவே டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளது” என்றனர்.