சென்னை, ஜூன் 23- தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வேக மாக பரவி வருவதாக மருத்து வத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரித்துள் ளார். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3-வது பிர தான சாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள் ளதால், அங்கு மேற்கொள் ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பேசிகையில், ‘‘தமிழ கத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வரு கிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங் களில் தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு வதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னையில் பாதிக்கப்படு கின்றனர். சென்னையில் 112 தெருக் களில் 3 பேருக்கு மேலும், 25 தெருக்களில் 5 பேருக்கு மேலும் பாதிக்கப்பட்டுள்ள னர். அந்தவகையில் 2,225 பேர் சென்னையில் கொரோ னாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற் றோர்கள் தங்களது குழந்தை களை பள்ளிக்கு அனுப்பும் முன்பு, அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று பரிசோ திக்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது. தற்போது கொரோனா பரவலின் பெரும் பகுதி பிஏ4, பிஏ5 என்ற வகை கொரோனா வாக தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபண மாகி இருக்கிறது. தமிழகத் தில் ஜூலை 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடை பெறும்’’ என்று அவர் கூறி னார்.