அரசு பசுமை காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை: அமைச்சர்
சென்னை, ஜூன் 27- தற்போது தக்காளி கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தக்காளி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அரசு பசுமை காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறுகையில், அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் .பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற் பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வெளிச்சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்
சென்னை, ஜூன் 27- தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர புதன்கிழமை (ஜூன் 28) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்து வப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. 499 நகரங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 13ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த மாணவர் வருண் சக்கர வர்த்தி ஆகியோர் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023 - 2024ஆம் கல்விஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. ஜூன் 28 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை http://www.tnhealth.tn.gov.in இன் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு: வைகோ வரவேற்பு
சென்னை,ஜூன் 27- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிறப்பின் அடிப்படை யில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரை யும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு பாராட்டத்தக்கது. அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் படித்து, அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி இல்லாமல் வேதனையோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை
சென்னை,ஜூன் 27- இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருவதால் புதன்கிழமை மாலையில் இருந்தே சென்னையில் இருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்கு வரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அரசு பேருந்துகளில் வழக்கத்தை விட புதன்கிழமை பயணம் செய்ய முன்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக் கிழமையை போல் முன்பதிவு கூடி உள்ளது. மேலும் தென்மாவட்டங்க ளுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. இதற்கிடையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந் துகளில் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. வார நாட்களில் பொது வாக குறைந்த அளவில் தான் கட்ட ணம் வசூலிக்கப்படும். ஆனால் பக்ரீத் விடுமுறை வருவதால் புதன்கிழமை பயணத்திற்கு அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.