states

மீத்தேன் திட்ட விவகாரம்: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி

சென்னை, ஏப்.6- தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படு கையை ஒட்டியே அமைந்துள்ள நிலை யில், மேலும் நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங் களில் அமைக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில் பேரவைக்கு வெளி யில் செய்தியாளர்களை சந்தித்தபோது  

இதனை விமர்சித்த எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “மீத்தேன் திட்டத்திற்கு திமுக அரசு தான்  கையெழுத்து போட்டது” என்றும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “மீத்தேன் திட்டம்  திமுக ஆட்சியில் இருந்த காலகட்டம் வரை ஒருபோதும் நிறைவேற்றப்பட வில்லை. இந்த திட்டம் குறித்த கேள்வி  வரும்போது, அப்போது முதல்வராக  இருந்த கருணாநிதி, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தை யும் திமுக ஆட்சி நிறைவேற்றாது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் நிறைவேற்றப்படாது. அது ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. தன்னை பெரிய விவசாயி என்று கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் ஆட்சியில் தான், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக் கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டிருக் கிறது. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுகவினர் எந்த அளவுக்குத் துடித்த னர் என்பதையும், அதை எதிர்த்து விவசாயிகள் பெரிய அளவில் போரா டியதையும், அந்தப் போராட்டத்தை  நசுக்குவதற்கு அதிமுக அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளையும், கைது நடவடிக்கைகளையும் அனை வரும் அறிவார்கள்” என்றும் அமைச்சர் சாடினார்.