states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 51.45 அடி

சேலம், அக்.29- மேட்டூர் அணை நீர்வரத்து ஞாயிறு காலை எட்டு மணிநிலவரப்படி 4,044 கன அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிறு காலை  51.45அடி யாக உயர்ந்திருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,207 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,044 கன  அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 18.73 டிஎம்சியாக உள்ளது.

சபரிமலையில் உணவுக் கட்டணம் அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை 

கோட்டயம், அக்.29- சபரிமலையில் மண்டல-மகரவிளக்கு பூஜையின் போது பம்பை மற்றும் சன்னிதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்துள்ளார். 

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,அக்.29- தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரி கள் பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். ஈரோடு மாவட்டம்,சத்திய மங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த அய்மான் ஜமால் காவல் கண் காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஆவடி சட்டம் - ஒழுங்கு துணை ஆணை யராகவும், கோவை மாவட்டம், பொள் ளாச்சி காவல் உதவி கண்காணிப் பாளராக இருந்த எஸ்.பிருந்தா காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு  பெற்று சேலம் வடக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்படு கின்றனர். மேலும், சேலம் வடக்கு காவல் துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், தாம்பரம் காவல் ஆணையர கத்துக்குட்பட்ட பள்ளிக் கரணை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும், ஆவடி சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் என்.பாஸ்கரன் தமிழ்நாடு சிறப்புகாவல் பட்டாலியன் (மதுரை) கமாண்டன்ட்டாகவும் மாற்றப்படு கின்றனர். இதேபோல், கட்டாய காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சுகுணா சிங், ரயில்வே காவல் கண் காணிப்பாளராக பதவி ஏற்பார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.

சமூக ஊடக தளத்தில் போக்குவரத்துக் கழகம்

சென்னை, அக்.29  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிகள் மற்றும் பொது மக்கள் தேவைக்காக சமூக ஊடக தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செய லாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பயணிகள் மற்றும் பொது மக்களின் குறிப்புரைகளுக்கு தகுந்த பதில் மற்றும் நடவடிக்கை எடுப்பது போக்குவரத்துக் கழகங்களை சீர்படுத்தவும், படம், வீடியோவை பதி விடுதல் மற்றும் பலவற்றின் மூலம் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள சமூக ஊடகங்கள் நமக்கு உதவுகின்றன. பொதுமக்களின் கேள்வி கள் மற்றும் கருத்துக்களை சேகரிப்ப தன் மூலம், அதனை பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப செயல்பட முடியும். இது போக்குவரத்துக் கழகங்கள் மீது பயணிகளிடம் நம்பிக்கையை மேலும் வளர்க்கும் மற்றும் நேர்மறை யான பார்வையை உருவாக்கும். இந்த சமூக ஊடகப் பக்கங்களைப் பின் தொடர்வதன் மூலம், நமது போக்கு வரத்துத் துறை மற்றும் 8 போக்கு வரத்துக் கழகங்களைப் பற்றி யும் பயணிகள் மற்றும் பொது மக்கள் மேலும் அறிந்து கொள்ளலாம், இது அவர்களின் குறிப்பு, சந்தேகங் களுக்கு பதில் தெரிவிப்பதன் மூலமோ அல்லது படம், வீடியோவில் குறியிடுவதன் மூலமோ அவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது.  போக்குவரத்துத் துறை அமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக சமூக ஊடக தளங்கள் “டிவிட்டர், பேஸ்புக், யூடியூப்” ஆகியவற்றை முதற்கட்டமாக சனிக்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.