states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியானது

சேலம், அக்.24- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை க்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  போதிய நீர் இல்லாததன்  காரணமாக கடந்த 10-ஆம்  தேதிக்குப் பிறகு பாசனத்தி ற்கு தண்ணீர் திறப்பது நிறு த்தப்பட்டது. அணையின் நீர் மட்டம் 30 அடியாக மட்டுமே இருந்தது. இந்நிலையில் நீர்வரத்தின் காரணமாக செவ்வாயன்று மாலை 49.06 அடியாக அணையின் நீர்ம ட்டம் உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 138  கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணை யில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

அமர்நாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம்

சென்னை, அக். 24 - கீழடியின் முதல் இரண்டு அகழாய்வுப் பணி களை தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராம கிருஷ்ணனை ஒன்றிய பாஜக அரசு 2017-ஆம்  ஆண்டு திடீரென வெளி மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது.  இதற்கு  கடும் கண்டனங் கள் எழுந்ததைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் தமிழ்நாட்டிற்கே அனுப்பியது. எனினும், கீழடி பணிக்கு அனுப்பப்பட வில்லை. இந்நிலையில் தென்னிந்திய கோவில் ஆய்வுத் துறை யிலிருந்து அமர்நாத் ராம கிருஷ்ணனை, தற்போது தில்லிக்கு பணியிட மாற் றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கைக்கு செல்ல இந்தியா உட்பட  7 நாடுகளுக்கு  விசா தேவையில்லை

சென்னை, அக்.24- இந்தியாவில் இருந்து இலங் கைக்கு செல்ல இனி விசா தேவை யில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என்றும் இந்தியா மட்டுமின்றி சீனா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கும் விசா தேவை இல்லை என்றும் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மார்ச் 31 ஆம்  தேதி வரை சோதனை முயற்சி யாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளதாகவும் சோதனை முயற்சி யில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு நிரந்தரமாக இந்த ஏழு நாடுகளுக்கு விசா தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை சுற்றுலா துறை வளர்ச்சி அடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் எம்எல்ஏ மரணம்:  அழகிரி இரங்கல்

சென்னை,அக்.24- தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான வேல்துரை கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலை யில், அக்.24 அன்று உயிரிழந்தார். கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலரும் பி.வேல்துரைஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கேஎஸ்.அழகிரி வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக சேரன்மாதேவி தொகுதியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர் பி.வேல்துரை. திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கி ரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளமைப்  பருவம் முதல் அயராது பாடுபட்டவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடி யாத பேரிழப்பாகும்” என்று தெரிவித் திருக்கிறார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை, அக்.24- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விடுமுறையின் தொடக்கத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக  கட்டணம் வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி  பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க கோரி தென் மாநில பேருந்துகள் கூட்டமைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்த நிலையில் போக்குவரத்து துறை  அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து களில் தவறுகள் இல்லை என்றால் விடுவிக்க  நடவடிக்கை எடுக்கப்படும். சிறைபிடிக்கப் பட்ட ஆம்னி பேருந்துகளில் அதிகாரி கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள் வர்”என்றார். மேலும், ஆம்னி பேருந்து உரிமை யாளர்களுடன் போக்குவரத்து இணை ஆணையர் முத்து தலைமையில் பேச்சு வார்த்தை தொடங்கியது. இதனை தொடர்ந்து, சென்னை கே.கே நகரில் உள்ள  இணை போக்குவரத்து ஆணையர் அலுவல கத்தில் இந்த பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் உடன்பாடு எட்டியதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்புகளை தானம் செய்த விவசாயி  உடல் அரசு மரியாதையுடன் தகனம்

கடலூர், அக்.24- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 34 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 17 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது டயர் வெடித்து அருகில் உள்ள மின்கம்பத் தில் மோதி கிருஷ்ணகுமார் காய மடைந்தார். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு சுய நினைவு திரும்பாத நிலையில் அவர்  மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால், கிருஷ்ண குமார் குடும்பத்தி னர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். இதையடுத்து 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது. இதை யடுத்து கிருஷ்ண குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, இந்த நிலையில் அவரது உடல் கஞ்சம நாதன்பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ண குமாரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதையுடன் கிருஷ்ண குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ண  குமாருக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில்  அவரது குடும்பத்திற்கு அரசு உதவ  வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக் கப்பட்டுள்ளது.