சென்னை, ஏப்.16- கிருஷ்ணகிரி மாவட்டத் தில் சாதி ஆணவத்தாக்குத லில் படுகாயமடைந்த அனு சுயாவுக்கு உரிய சிகிச்சை அளித்து, அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண் டும். அவர் மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொ டத்தை சேர்ந்த அனுசுயா என்பவரை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திரு மணத்திற்குப் பிறகு திருப்பூ ரில் குடும்பம் நடத்தி வந்துள் ளனர். இந்நிலையில் சுபா ஷின் தந்தை தண்டபாணி, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக சுபாஷ் -அனுசுயா ஆகிய இருவரையும் மிரட்டியுள் ளார். தண்டபாணி தன் தாய் கண்ணம்மா மூலமாக சுபாஷ்- அனுசுயா இருவரை யும் வீட்டிற்கு அழைத்துள் ளார். தனது மகனுக்கு கோபம் போய்விட்டதாக நினைத்து சுபாஷின் பாட்டி கண்ணம்மா வும் தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து உள்ளார். இதை பயன்படுத்தி தண்ட பாணி அதிகாலை நேரத்தில் அங்கே சென்று சொந்த மகன் சுபாஷை சராமாரியாக வெட்டி உள்ளார். சுபாஷின் காதலுக்கு துணை நின்ற தன் தாய் கண்ணம்மாவை கடு மையாக ஆயுதங்களால் தாக்கி யுள்ளார். இதை தடுக்க வந்த அனுசுயாவையும் வெட்டி யுள்ளார். இந்த மிருகத்தன மான தாக்குதலில் சுபாஷ் மற்றும் தண்டபாணி தாயார் கண்ணம்மாள் சம்பவ இடத் திலேயே துடிதுடித்து உயிரி ழந்தனர். அனுசுயா படு காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இச்சம்பவம் தமி ழகத்தில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே கிடாம் பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற் காக ஜெகனை சரண்யாவின் குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்தனர். இச்சம் பவத்தின் அதிர்ச்சி அடங்கு வதற்குள் தற்போது மீண்டும் ஒரு சாதி ஆணவத்தோடு படு கொலை நடைபெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப நாட்களாக இத்தகைய சாதி ஆணவ தாக்குதல் களும் படுகொலைகளும் நடைபெறுவது அதிகமாகி வருகிறது. உடனடியாக தமி ழக அரசு இப் படுகொலை களை தடுத்து நிறுத்த நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் சாதி ஆணவ குற்றங்களுக்கு எதி ராக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும் இம் மாவட்டத்தில் சமூக நீதி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட வேண்டும். சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சமத் துவ சமூகம் குறித்த விழிப்பு ணர்வு கருத்தரங்கங்களை நடத்திட மாவட்ட நிர்வாக திற்கு வலியுறுத்திட வேண் டும். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் களை கடுமையான பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனையை உறுதிப்படுத்த காவல்துறை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். படு காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயாவிற்கு உரிய சிகிச்சை அளிப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். அனுசுயாவின் உயிருக்கும் அவரின் குடும் பத்திற்கும் பாதுகாப்பு அளித் திட வழிவகை செய்ய வேண் டும். மிக மோசமான சூழ லில் தள்ளப்பட்டு இருக்கும் அனுசுயாவிற்கு தமிழக அர சின் சார்பில் அதிகபட்ச நிவா ரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.