states

அக்.-11 மனித சங்கிலியில் மாதர் சங்கம் பங்கேற்பு

சென்னை,அக்.7- அக்டோபர்  11 மனித சங்கிலியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் பங்கேற்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் ஏ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  அமைதியான சூழலில் இருக்கும் தமிழகத்தை அச்சுறுத்தும் விதமாக ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் நட வடிக்கைகள் இருக்கின்றன. தமிழ கத்தில் மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை, சமூக அமைதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை பாது காக்கும் பெரு முயற்சியாக தமிழகத்தில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, அக்டோபர் 11-ம் தேதி மாபெரும் மனித சங்கிலி நடத்திட அழைப்பு விடுத் திருக்கிறது. இந்த மனித சங்கிலி யில்  தமிழகத்தில் மக்கள் ஒற்றுமைக்கு  ஆபத்து வரும்போது பெண்களை திரட்டி  முன்னணியிலிருந்து செயலாற்றி  வரும் அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம்  பங்கேற்கும். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து மையங்களி லும் பெருமளவில் பெண்களை திரட்டி மனித சங்கிலியில் கரம் கோர்க்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டக்குழுக் களை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.