“வலியைப் பழகி, புதிய வழியை உருவாக்கு போராளியின் வேலை அதுதான். மக்களுக்கான அரசியலை போதித்திடு சரியான தத்துவத்தை தேர்ந்தெடு சுரண்டுவதற்கு அவர்கள் தத்துவங்களை உருவாக்குகிறார்கள். அதை தகர்த்தெறியும் தத்துவத்தை போதித்திடு..” வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, வருமான குறைவு – வருமான மின்மை, பசி, பட்டினி, வறுமை, ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல்கள் - இவற்றை மறைக்க வலதுசாரிகள் முயற்சிக் கிறார்கள். இந்த உண்மையைப் புரிய வைத்து இதற்கு மாற்றம் காணும் அமைப்பு களின் பின்னால் மக்களை எப்படி நாம் திரட்டுவது என்ற கேள்விக்கு விடை தேடி யவர்களில் தியாகி இரத்தினசாமியும் ஒருவர். “என் மக்களின் வாழ்க்கை மேம் பாட்டில்தான் எனது செயல்கள் மேம்படும். அதுவே எனது கட்சி கொடுத்த பணி”. இது தான் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளின் பால பாடம். “உழைப்பும் உற்பத்தியுமே! விலங்கி லிருந்து மனிதனை வேறுபடுத்தியது. உண்பவன் ஒருபக்கம் உழைப்பவன் மறுபக்கம் என்ற நிலையில் உழைப்பை மேம்படுத்த சமூகமே உழைக்க வேண்டும் ! சுரண்டும் தனியுடைமை தகர்ந்து சமத்துவம் அளிக்கும் சமூக வுடைமை மலர வேண்டும்...
தனி யுடைமை காக்கும் தத்துவங்களும், அமைப்பு முறையும், மூடநம்பிக்கை களும் தகர வேண்டும்” என்ற வேட்கை யோடு களத்தில் நின்று போராடியவர் இடுவாய் தியாகி தோழர் இரத்தினசாமி. கடந்த பத்தாண்டுகளில் மதவெறி பாஜக ஆட்சியில் இந்தியாவில் உழைக்கும் மக்களின் நலன்களும், உரிமைகளும், அவர்களின் வளங் களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டு வருகிறது. இதற்கு எதிராக போராடும் களப் போராளிகளை பல ஆள் தூக்கிச் சட்டங்களின் மூலம் வேட்டையாடுகிறது ஒன்றிய பாஜக அரசு. ஏகாதிபத்தியத்தையும், கார்ப்பரேட் பெரு முதலாளித்துவத்தையும், நிலப்பிரபுத்துவ அமைப்பையும் எதிர்த்த போராட்டத்தில் இன்றைய சூழலில் இந்தியாவில் சாதிய, மத அடையாளங் களின் மூலமும், மூடநம்பிக்கை உள்ளிட்ட பிற்போக்குத் தன்மைகளை தனதாக்கி மக்களைப் பிளவுபடுத்தும் பிளவுவாத அரசியலுக்கு எதிராகப் போராட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
தீர்ப்புகளின் பின்னால் கம்யூனிஸ்டுகளின் போராட்டம்
கார்ப்பரேட் – மதவெறி சக்திகளின் கூட்டுக் களவாணித் தனத்தை நாடு பார்த்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகளும் இதனை அம்பலப்படுத்த முயற்சி செய் கின்றன. சண்டிகர் மேயர் தேர்தல், தேர்தல் பத்திர மோசடிகள், மக்கள் பிரதிநிதிகள் லஞ்சம் வாங்குவது ஆகி யவை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு கள் வருவதற்கு பொதுத்தளத்தில் ஜன நாயகப் போராட்டங்களை முன்னின்று நடத்திய கம்யூனிஸ்டுகளின் மேன்மை யான நடவடிக்கைகளும் ஒரு காரண மாக அமைந்துள்ளது. களத்தில் நின்று இத்தகைய நிலை மைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன், தேச நலனை முன்னிறுத்திப் போராடும் போது கம்யூனிஸ்ட்கள் தாக்கப் படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அவர்களின் சொத்துக்கள் சூறை யாடப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் மீது உண்மைக்கு மாறான வதந்தி களையும், அவதூறுகளையும், முத லாளித்துவ ஊடகங்களின் மூலம் இன்றைய பெரு முதலாளித்துவ அமைப்பு செய்து வருகிறது.
களப்பலியான தோழர் பழனிசாமி
இதற்கு எதிராக மக்களை அணி திரட்டுவதில் வர்க்க ஒற்றுமையை கட்டு வதில் களவரிசையில் முன்னின்ற பகுதி இடுவாய் ஊராட்சிப் பகுதி. 1978களில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தின் போது முத லாளிகளால் ஏராளமான தாக்குதல் களுக்கு மத்தியில் தோழர் சீரா ணம்பாளையம் பழனிசாமி வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்கு பின்னும் மண்டியிடாத வீரமும், தொழிலாளி வர்க்கத்தின் வலுமிக்கப் போராட்டமும், தொழிலாளிகளின் வர்க்க உணர்வின் முன்பு முதலாளி வர்க்கம் பணிந்து வழிக்கு வந்தது.
ஊராட்சித் தலைவராக...
வரலாற்றின் தொடர்ச்சியாக இள மைக் காலம் தொட்டு அர்ப்பணித்துக் கொண்டு நற்பணியிலும், விளை யாட்டிலும், எழுத்தறிவு புகட்டுவதிலும் இதர தோழர்களோடு இணைந்து தனக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்டவர்தான் பாலரத்தி னம் என அழைக்கப்பட்ட தோழர் இரத்தி னசாமி. போராட்டத்தின் உறைவிடமாக இடுவாய் பகுதி கிராமங்கள் திகழ்ந்தன. கட்சியின் செல்வாக்கு வளர்ந்து வந்த சூழலில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 1996ல் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இடுவாய், செட்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், முதலி பாளையம், பொங்குபாளையம் ஆகிய ஊராட்சிகளில் தனித்து நின்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றது. இடுவாயில் ஊராட்சி மன்ற தலைவராக தோழர் கே.இரத்தின சாமியும் தேர்வு பெற்றார். ஒரு கம்யூனிஸ்டுக்கு உண்டான எளிமையோடு, உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக பணியாற்றினார். இடுவாய் கிராமத்தில் அன்றைய காலத்தில் விவசாயக் கிணறுகளில் தண் ணீர் விற்பனையை தடுத்து விவ சாயத்தை பாதுகாத்தது; ஆதிக்க சக்தி களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை, எளிய குடும்பங் களுக்கு பட்டா போட்டுக் கொடுத்து பாரதிபுரம் என்ற ஊரை உருவாக்கியது; பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடு காடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத்துவ வாழ்க்கையை உறுதி செய்தது; தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் வழிபாட்டு உரிமை யை பாதுகாத்தது; பாழ்பட்டிருந்த இடு வாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை புன ரமைத்து உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது.
தாக்குதலும் படுகொலையும்
இப்படி கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமியின் பணியும் ஓங்கி வளர்வதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஏப்ரலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப் பணி செய்து கொண்டு இருந்த தோழர் இரத்தினசாமியை கத்தியால் குத்தி, வாயில் விஷத்தை ஊற்றி காட்டில் வீசிச் சென்றனர். உயிருக்கு போராடிய அவர் மருத்துவ சிகிச்சைக்குபின் மீண்டும் ஊராட்சித் தலைவராக பணி யாற்றினார். இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில், மக்கள் செல் வாக்கின் காரணமாக இரண்டாம் முறை யும் வெற்றி பெற்று மக்கள் சேவையை முன்னிலும் கூடுதலாக செய்தார்.
கம்யூனிஸ்ட்டுகளின் குணம்
அயராது பாடுபட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தி யினர் 2002 மார்ச் 12 இரவு தோழர் இரத்தினசாமி அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து, கொன்ற தற்கான 8 காரணங்களை ஒரு அட்டை யில் எழுதி அருகிலிருந்த மரத்தில் கட்டித் தொங்கவிட்டுச் சென்றார்கள். அதில், “நீ கம்யூனிஸ்டாக இருப்பது, சக்கிலியர்களுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றி யது, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது” என்பன உள்ளிட்ட காரணங்களை எழுதி வைத்தனர். அவர்கள் சொன்ன காரணங்கள் கம்யூனிஸ்டுகளின் பண்பு, குணம், போராட்ட திறன், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராடுவது; தியாகம் செய்வது. “வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால் எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது’’ - என்ற காரல் மார்க்சின் வார்த்தையை அர்த்தப்படுத்தியவர் தோழர் இரத்தினசாமி. இன்றும் இடுவாய் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வரு கிறது. அதற்கு எதிராக பிஜேபி உள்ளிட்ட சில பொறுக்கமுடியாத ஆதிக்க சக்தி கள் இணைந்து கொண்டு அவதூறு களையும், தனி மனித தாக்குதலையும் தொடுக்கிறது. இதற்கு எதிராக மக்கள் துணை கொண்டு முறியடிக்கும் வல்லமை மார்க்சிஸ்ட் கட்சிக்கும், அதன் அமைப்புகளுக்கும் உண்டு. இடுவாய் தியாகி இரத்தினசாமி நினைவு தினத்தில் சபதமேற்போம்.. பாசிச, மதவெறிக் கும்பல்களை தொழி லாளி வர்க்கத்தின் தலைமையில் தோற்கடிப்போம்.. இந்தியாவின் மதச்சா ர்பற்ற தன்மையை பாதுகாப்போம். பட்டியலின, பழங்குடியின, சிறு பான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்... கார்ப்பரேட் - பாஜக கூட்டுக் கள வாணித் தனத்தை முறியடிப்போம்..எஸ்பிஐ போன்ற வங்கிகளின் துணைக் கொண்டு அடிக்கும் கொள்ளைகளுக்கு முற்று புள்ளி வைப்போம். மார்ச் 13 (இன்று) - மாலை 5 மணிக்கு இடுவாயில் நினைவஞ்சலி ஊர்வலம், பொதுக்கூட்டம் அனைவரும் வாரீர்!