states

303 நாளாக போராடும் கரும்பு விவசாயிகள்: பல கோரிக்கைகள் ஏற்பு

சென்னை, செப்.27- திருமண்டகுடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் போராட்டம் 303 வது நாளாக தொடர்கிறது. ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம்  திருமண்டகுடி யில் ஆரூரான் ஆலை முன்பு கடந்த 300 நாட்களாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் அரசு காலம் தாழ்த்தி வந்த நிலையில் செப்.26 அன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போரா ட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்தவர்களை குண்டு கட்டாக தூக்கி யும் இழுத்தும் சென்று காவல்துறை யினர் கைது செய்தனர். இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர், விவசாயி கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில செயலாளர் துரைராஜ், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநில தலைவர் எஸ்.வேல்மாறன், துணைத் தலைவர் நல்லா  கவுண்டர், ஆலை தலைவர் தங்க.காசி நாதன்,  மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் சங்க நிர்வாகி கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயிகள் பெயரில்  ஆரூரான் சர்க்கரை ஆலை வங்கி களில் கடன் வாங்கி பயன்படுத்திக் கொண்ட ரூ.115 கோடியை வங்கிகள் தள்ளுபடி செய்து அறிவித்துவிட்டது. வங்கிகள் இனி இந்த பணத்தை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப் பாது. கடன் தள்ளுபடி செய்வதற்கான கடனில்லா சான்று வழங்க வங்கிகள் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது. விவசாயிகள் புதிய கடன் வாங்கிக் கொள்ள வங்கிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

மேலும் கணக்கில் சேராமல் விவ சாயிகள் பெயரில் ஆரூரான் ஆலை வாங்கிய கடன் இருந்தால் அதனையும் இணைத்து தள்ளுபடி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை தரவேண்டிய கரும்பு  பண  பாக்கி தேசிய கடன் தீர்ப்பாய உத்தரவுடன் சேர்த்து எப்ஆர்பி  பாக்கியை முழுவதும் வழங்க ஆலையை ஏலம் எடுத்துள்ள கால்ஸ் டிஸ்டிலரி லிமிட்டெட் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. கரும்பு கட்டுப்பாடு சட்டம்-1966 எப்ஆர்பி வழங்க தாமதமான காலத்திற்கு 15 விழுக்காடு வட்டி கணக் கிட்டு வழங்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. சர்க்கரை துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வட்டியை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி யளித்தனர். 2013-14 முதல் 2016-17 வரை யிலான நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை எஸ்ஏபி ஆரூ ரான் ஆலை விவசாயிகளுக்கு தர வில்லை, கடலூர் மாவட்டம், சித்தூர் ஆரூரான் ஆலை ரூ.43.29.கோடியும், தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டகுடி ஆரூரான்  ஆலை ரூ.38.10 கோடியும் எஸ்ஏபி பாக்கி விவசாயிகளுக்கு தர வேண்டும்.  இந்த ஏஎஸ்பி பாக்கியில் ஒரு டன் கரும்புக்கு ரூ.40 விவசாயி களுக்கு கால்ஸ் நிறுவனம் ஊக்கத் தொகை என்ற பெயரில் அளிக்க ஒப்புக் கொண்டது. இதில் திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை 4 ஆண்டுகள் அரைத்த பத்து லட்சம் டன் கரும்புக்கு ரூ.4.5 கோடி விவசாயிகளுக்கு தருவ தாக  கால்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டு ள்ளது. எஸ்ஏபி வழக்கு உயர் நீதி மன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்று எஸ்ஏபி பாக்கியை கால்ஸ் வழங்க வேண்டும். 2015-16,2016-17 காலத்தில் விவசாயி கள் பெற்ற பயிர் கடன் ஒடிஎஸ் முறை யில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் மீத முள்ள 150 விவசாயிகள் பயிர் கடனுக்கு  தீர்வு காணப்படும்.

2013-14, 2014-15 காலத்தில் விவ சாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர் கடன்களை ஆரூரான் ஆலை பிடித்தம் செய்து கொண்டு வங்கி களுக்கு  செலுத்த வில்லை. இந்த தொகையை கால்ஸ் நிறுவனம் வங்கி களுக்கு செலுத்த வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. இதனை கால்ஸ் ஏற்க வில்லை. இப்பிரச்சனைக்கு விவா தித்து தீர்வு காண வேண்டியுள்ளது. இவை தவிர விவசாயிகள் பெயரில் ஆலை வாங்கிய கடனில் ஒரு பகுதி கணக்கில் வராமல் உள்ளது. விவசாயி களுக்கு கொடுத்ததாக  செட்டில்மெண்ட் செய்தது பல கோடி  ரூபாய் பாக்கி உள்ளது இவை உட்பட இதர பிரச்சனை களுக்கும் தீர்வு காண ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. திரு மண்டகுடி ஆரூரான் கரும்பு விவசாயி கள் 1041 பேர் கூட்டுறவு சொசைட்டி களில் வாங்கிய பயிர் கடன் ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு பணத்தில் பிடித்தம் செய்து கொண்டது. கூட்டுறவு சொசைட்டி களுக்கு செலுத்தவில்லை. இந்த பணத்தை கால்ஸ் நிறுவனம் விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை அந்நிறு வனம் ஏற்கவில்லை .இந்த பணத்தை விவசாயிகளுக்கு அரசு பெற்றுத்தர வேண்டும். தேசிய கடன் தீர்ப்பாயம் வழங்கி யுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மேல்முறை யீடு செய்துள்ளது. விவசாயிகள் நலனை காத்திட மாவட்ட ஆட்சியர் NCALTš மேல் முறையீடு செய்ய வும் ஆட்சியர் ஒப்புக்கொண்டார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு  முன் வைத்த கோரிக்கைகளில் பல ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மீத முள்ள கோரிக்கைகளையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று  சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப் பட்டது. இந்த நிலையில் பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.

தொடரும் போராட்டம்
மீதமுள்ள கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றி 303 நாட்களாக நடைபெற்று வரும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆரூரான் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.  மாவட்ட ஆட்சி யரும் ஒப்புக்கொண்டார். அதுவரை திருமண்டகுடி சர்க்கரை ஆலை முன்பு  காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் வேல்மாறன், பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.