ஈரோடு, ஏப். 8- மானிய கோரிக்கையில் பால் விலை உயர்வு, பால் உற்பத்தியாளர் கள் முன்னேற்றத்திற்காகவும், பாலை கூடுதலாக கொள்முதல் செய்வது தொடர்பாக அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் தினமும், 40 லட்சம் லிட்டரிலிருந்து, 26 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு, 5 முதல், 10 ரூபாய் கூடுதலாக வழங்குகிறது. பால் கொள்முதல் அளவை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். அத்துடன் விநியோகத்திலும் கவ னம் செலுத்துகின்றனர். அதேசமயம் ஆவினில் (திறமையற்ற நிர்வா கத்தால்) நட்டத்தில் இயங்குகிறது. இதனை சீரமைக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி, பால் உற்பத்தியாளர்க ளுக்கு லிட்டருக்கு ரூ. 7 உயர்த்தி, பசும்பால் 42 ரூபாய், எருமைப்பால் 51 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கோரினோம். இதற்கான தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், மானிய கோரிக்கையில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பால் உற் பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தி யாளர்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி மூலம் ரூ. 2 லட்சம் கடன் வழங்கப்படும் என்பதை வரவேற்க லாம்.
சொசைட்டிக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல், சத்தியமங்கலத்தில் பசுந்தீவன குச்சி ஆலை அமைக்க ரூ. 6.75 கோடி ஒதுக்கீடு, கடலுரில் கால்நடை தீவன ஆலை அமைத்தல் என, 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ள னர். இவை அத்துறையின் கட்டுமான திட்டங்களாகும். பால் உற்பத்தி யாளர்களுக்கு கொரோனா காலத்தில் பணம் தர முடியவில்லை. அதற்காக சுழல் நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்க கேட்டோம், ஒதுக்கவில்லை. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒரு லிட்ட ருக்கு ரூ.4 முதல் 5 வரை ஊக்கத் தொகை தருவதுபோல, தமிழ்நாட்டி லும் வழங்க வேண்டும் எனக் கோரி னோம். அதுப்பற்றிய அறிவிப்பு இல்லை. இந்தியாவில் பால் கொள் முதலில் அமுல் நிறுவனம், முதல் இடத்திலும், தமிழகம், 2ஆம் இடத்திலும் இருந்தது. தற்போது, 7 ஆம் இடத்துக்கு சென்றுள்ளது. கர்நாடகாவின் நந்தினி, 4ஆம் இடத்திலிருந்து, 2ஆம் இடத்துக்கு வந்துள்ளது. ஆவினுக்கு கூடுதல் நிதி வழங்க தயாராக இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும், 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்த னர். இதனால் ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் ஆவினுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்புக்கு நிதி தரவில்லை. 50 சதவீத மானிய விலை யில் கலப்பு தீவனம் கோரியது குறித் தும் அறிவிப்பு இல்லை. பாலை ஆரம்ப சங்கத்தில் இருந்து ஏற்றும் போது பாலின் அளவு, தரத்தை குறித்து தர வேண்டும் என கேட்கிறோம். கடந்த ஆட்சியில், 50 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அடுத்த பட்ஜெட்டில் வழங்குவதாக கூறினர். ஆட்சி மாறி திமுக, 2 பட்ஜெட் தாக்கல் செய்தும், நிதி ஒதுக்கவில்லை. கடந்த, 2017 இல் நீதிமன்ற வழங்கிய இந்த உத்தரவைக்கூட மதிக்கவில்லை. சொசைட்டி ஊழியர்களுக்காக திட்டங்கள் இல்லை. சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு அறிவிப்பு இல்லை. பால் உற்பத்தி யாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் உற்பத்தியாளர், 6 ரூபாய், சொசைட்டி, 6 ரூபாய் என, 12 ரூபாய் பிரிமியம் செலுத்தி பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் இறந்தால், 3 லட்சம் ரூபாய் வழங்குவதாக இன்சூரன்ஸ் திட்டத்தில் தெரிவித்திருந்தனர். உற்பத்தியாளரிடம் கூடுதல் தொகை பிடித்து, அரசும் கூடுதல் தொகை வழங்கி, விபத்து, இயற்கை மரணத்திற்கு தொகை வழங்குவது அவசியம் என கேட்டோம். இதுபற்றியும் கூறவில்லை. இவ்வாறு பட்ஜெட்டில் பால் உற்பத்தியாளர்களுடைய கொள் முதல் விலை உயர்வு மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் துறையின் மானிய கோரிக்கையிலும் ஊக்கத்தொகை, கொள்முதல் விலை உயர்வு, ஆரம்ப சங்க ஊழியர்கள் பணிபாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லாதது உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.