states

img

வன்முறைக்கு காரணமான தீர்ப்பு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்

மார்ச் மாதம் 27 அன்று மணிப்பூர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எம்.வி முரளிதரன் “மெய்டேய்” சமு தாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க பரிசீலிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். இந்த சர்ச்  சைக்குரிய தீர்ப்பால் பழங்குடி யினராக வாழும் குக்கி மக்களி டையே கடும் கொந்தளிப்பு ஏற்  பட்டு போராட்டங்கள் வெடித்  தன. போராட்டங்கள் படிப்படி யாக வன்முறையாக மாறி, 6 மாத காலமாக இன்னும் கலவர பூமியாக மணிப்பூர் காட்சி அளித்து வருகிறது. இதுவரை 270க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. மணிப்பூர் வன்முறைக்கு பல்வேறு காரணங்கள்  இருந்தாலும் முக்கியக் காரணம் நீதிபதி எம்.வி. முரளிதரனின் தீர்ப்பு என்று கருதப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூட இந்த  தீர்ப்பு தவறானது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த  தீர்ப்பை மாற்றிக்கொள்ள நீதிபதி முரளிதரனுக்கு வாய்ப்பு இருந்தும் கூட அவர் அந்த வாய்ப்பை பயன்  படுத்தவில்லை என நீதிபதி சந்திர சூட் அவரை கடு மையாகச் சாடியிருந்தார். இந்நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் எம்.வி.  முரளிதரனை தற்போது கொல்கத்தாவுக்கு இடமாற்றம்  செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு வெளி யாகும் என தெரிகிறது.