states

img

வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்குக! - எஸ்.பாலா

ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தலைமை  நீதிபதி ரமணா  பேசியுள்ளார். நீதித் துறையில் ஏராள மான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகள் மட்டுமல்லாது நீதித்துறையில் எல்லா மட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது  என்று அவர் பேசியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி துவங்கி சாதாரண குடிமகன்  வரை ஒன்றிய மோடி அரசிடம் வைக்கும் கோரிக்கை ‘வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்’ என்பது தான்.

தீவிரமடையும் வேலையின்மை

ஒன்றிய மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை  இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 23.5 சதவீதமாக மிக அதிகமாக உள்ளது. ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக பின்பற்றி வரக்கூடிய தாராளமயக் கொள்கைகளின் விளைவாக வேலைவாய்ப்பு இன்னும் சுருங்கி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ கொள்கை களும் வேலைவாய்ப்பை மேலும் மேலும் சுருக்கு கின்றன. புதிதாக வேலை வாய்ப்புச் சந்தையில் இணையக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கப் படவில்லை. இதனால் வேலைவாய்ப்பு சந்தையை மேலும் நெருக்கடி மிக்கதாக மாற்றி வருகிறது.

சரியும் தொழிலாளர் பங்கேற்பு

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (எல்பிஆர்) மார்ச் மாதத்தில் 39.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.  இது  பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட 39.9 சதவீத தொழி லாளர் பங்கேற்பு விகிதத்தை விட குறைவாகும்.  ஏப்ரல்-ஜூன் 2021 இல் கோவிட்-19 இரண்டாவது அலையின் போது இருந்ததை விடவும் குறைந்து விட்டது. இரண்டாவது அலையின் போது எல்பிஆர் மிகக் குறைந்த அளவாக ஜூன் 2021 இல் 39.6 சதவீதமாக இருந்தது.  2022 மார்ச், கோவிட்-19 அலைகள் ஏதுமின்றி, மிகக் குறைவான கட்டுப்பாடுகளுடன் இருந்தபோதும், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.5 சதவீதமாக மோசமாக சரிந்துள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் 14 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு வீழ்ச்சியானது, வேலைவாய்ப்பு விகிதத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழல் பொருளாதார நெருக்கடியின் மோசமான வெளிப்பாடு ஆகும்.

விவசாயமும் தொழிலும்...

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம்’ என்றார் பாரதி. இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி  ஆகும். இம்மக்களுக்கு தேவையான உணவு மற்றும்  பொருட்கள் கிடைத்திட மனிதவள மற்றும் தொழில் நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்தி உற்பத்திசெய்தால் சுயசார்பு அடைய முடியும். இதன் மூலம் கோடிக்கண க்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கமுடியும். கார்ப்பரேட் நல கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றினால் தொழில் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்துடன்  விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தது. விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் இச்சட்டத்தை முறியடித்துள் ளது. இல்லையெனில் இந்திய மக்களின் உணவு சந்தையும், 42.6 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வேளாண்மையும் கார்ப்பரேட் கரங்களில் சிக்கி இருக்கும்.

சிறு, குறு தொழில்கள்

இந்திய நாட்டின் வேலைவாய்ப்பிலும் உற்பத்தி யிலும் மிகப்பெரிய பங்களிப்பை சிறு மற்றும் குறு தொழில்கள் அளித்து வருகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடும் பாதிப்பிற்கு இத் துறையினர் ஆளா னார்கள். நாடு முழுவதும் 5 லட்சம் தொழில் நிறு வனங்கள் மூடப்பட்டு 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலமும் அதற்கு பின்பும்  இன்னும் பல இன்னல்களை விளை வித்தது. இத்தொழில் முனைவோர்கள் தொழிலாளர் களாக மாற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பலர் கடனாளியாக மாறி தொழிலை கைவிட  வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அரசுத் துறையில்...

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின் படி, ஒன்றிய அரசுத்துறைகளான ரயில்வே, உள்துறை, பாதுகாப்பு, அஞ்சல்,வருவாய், இதர துறைகளில் 9 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பாததன் விளைவாக முப்ப த்து ஐயாயிரம் பணியிடங்களுக்கு ஒரு கோடியே 25 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கும் நிலைமை உள்ளது.

பெண்களின் வேலைவாய்ப்பு  கடும் வீழ்ச்சி

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு பெண்  தொழிலாளர்கள் பங்கேற்பு வீதம் 32 சதவீதம் ஆக  இருந்தது. கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்னர்  2019ஆம் ஆண்டு இது 21 சதவீதமாக சரிந்தது.2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இது 9.4 சதவீதமாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. தொடர்ந்து பெண்  தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த விகிதம் பிரிக்ஸ் நாடுகளை  விடவும், அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையை விட மிக குறைவாகும். படித்த இளம் பெண்களின் எண்ணிக்கை நாடு  முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக் கான வேலை வாய்ப்பை உருவாக்கிட மோடி அரசு தவறிவிட்டது. இது பெண்களை இரண்டாம் தரமாக கருதுகிற மனுவாத சித்தாந்தத்தின் மற்றொரு வெளிப்பாடே ஆகும்.

கார்ப்பரேட் நல கொள்கைகளுக்கு மாற்றாக...

நாடு முழுவதும் நகர்ப்புற வேலைவாய்ப்பு சட்டத்தை கொண்டுவருவது; கிராமப்புற வேலை உத்தரவாத சட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கா மல் தேவையான அளவு உயர்த்துவது; அரசு துறை களை விரிவாக்கம் செய்வது; கார்ப்பரேட்டுகளுக்கு மாறாக தொழிலிலும் வேளாண்மையிலும் உற்பத்தி  மற்றும் விநியோகத்தில் கூட்டுறவுத் துறையை பலப்படுத்துவது; சிறு மற்றும் குறு தொழில்களுக்கான சந்தையை விரிவாக்குவது; விவசாயத்தை பாதுகாக்க உணவு சந்தையை மேம்படுத்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது; கல்வி மற்றும் மருத்துவத்தில் பொது முதலீட்டை அதிகப்படுத்துவது; பெண்களுக்கு சம வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது என வேலை வாய்ப்பிற்கான திட்டமிட்ட முயற்சிகளை மோடி அரசாங்கம் மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை.

தமிழகத்தில்...

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 75 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் காலிப்பணி யிடங்கள் 6 லட்சத்திற்கும் மேல் உள்ளன. பொதுத்துறை யில் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.  இதனை முழுமையாக நிரப்ப அரசு முன்வரவேண்டும்.

தேவை வேலை... 
வெறுப்பு அல்ல...!

இளைஞர்களின் அடிப்படையான வேலைவாய்ப்பு பிரச்சனையை திசை திருப்பும் வகையில் ஒன்றிய பாஜக அரசு, குடியுரிமை திருத்த சட்டம், ஹிஜாப் உள்பட  வெறுப்பை விதைக்கும் பிரிவினை அரசியலை மேற்கொள்கின்றது. தலைவர்களின் சிலைகளை அவ மரியாதை செய்வது, மாநில மொழிகளை புறக்கணிப் பது, கூட்டாட்சி உரிமை மறுப்பது, நிதி பறிப்பு, நீட்  தேர்வு என தமிழக நலன்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு வருகின்றனர். இந்த மக்கள் ஒற்றுமையை பிரிக்க பாசிச சிந்தனை கொண்ட ஆர்எஸ்எஸ்சால் வழி நடத்தப்படக் கூடிய மோடி அரசாங்கம், சாதிய, மத மோதல்களை  திட்டமிட்டு மேற்கொண்டு பேரழிவை விதைக்கிறது. 

இளைஞர்களுக்கு வேலை கொடு!

இந்தப் பின்னணியில் வேலையின்மை பிரச்ச னைக்கு தீர்வுகாண, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது போராட்ட இயக்கங்களை விரிவுபடுத்து கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2022 ஏப்ரல் 21 முதல் 2022 மே 01 வரை சென்னை, கன்னியாகுமரி, கோவை,  புதுச்சேரி என நான்கு முனைகளிலிருந்து திருச்சி மாநகர் நோக்கி 3000 கிமீ வாலிபர் சங்க சைக்கிள் பயணம் நடைபெறவுள்ளது.  இப்பயணத்தில் தென்காசி, தேனி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை திருவள்ளூர் ஆகிய ஏழு உப பயணங்களும் இணை கின்றன.

கட்டுரையாளர் :  மாநிலச் செயலாளர், 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்