விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா-விற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார். இதனை கண்டித்து ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை வியாழனன்று (அக்.26) இந்திய மாணவர் சங்கம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் கல்லூரியிலிருந்து அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்த்சாமி தொடங்கி வைத்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் இரா.பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர் சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.