மதுரை, மே 10- கல்விக்கடனாக ரூ.125 கோடி வழங்கி தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ள மதுரை மாவட்ட வங்கி களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வங்கி மேலாளர்கள், கனரா வங்கியின் துணை பொது மேலாளர் சுஜித் குமார் சாகு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் ராம்பிர சாத், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அனில் மற்றும் சந்தான பாண்டியன் ஆகியோரை புதனன்று நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களி டம் சு. வெங்கடேசன் எம்.பி., கூறுகை யில், “மதுரை மாவட்டத்தில் 2022 -2023ஆம் கல்வி ஆண்டில் அதிகமாக கல்விக்கடன் வழங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களை பாராட்டும் வகையில் மதுரை மாவட்டத்தில் உயர் கல்விக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கல்வி கடன் வழங்க மாவட்ட நிர்வாக மும், வங்கி நிர்வாகமும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகமும் கூட்டாக விரிவான முயற்சிகள் மேற்கொண்டு கடந்த 13. 11. 2022 ஆம் தேதி மாவட்டம் முழுமைக்குமான கல்விக் கடனுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆண்டு ரூ. 119 கோடி மாண வர்களுக்கான கல்விக்கடனாக வழங்கப் பட்டது. இதுதான் தமிழகத்தில் முதன் முத லில் இவ்வளவு கல்விக்கடன் வழங்கப் பட்டது.
மதுரை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கல்விக் கடன் பற்றிய தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.119 கோடி வங்கிக் கடன் இலக்கை தாண்டி 2023ஆம் ஆண்டிற்கான கல்விக்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் ரூ. 125. 98 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 3122. இவர்களில் 2533 பேருக்கு ரூ.125.98 கோடி கல்விக்கடன் கொடுக்கப் பட்டுள்ளது. இது மட்டுமல்ல கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 89 சத வீதம் பேருக்கும் கடன் வழங்கப் பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கல்விக்கட னில் தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 2,166 மாணவர்களுக்கு ரூ.111.48 கோடி வழங்கியுள்ளன. 19 தனியார் வங்கிகள் 367 பேருக்கு ரூ.14. 50 கோடி வழங்கி யுள்ளார்கள். இதில் கனரா வங்கி 468 மாணவர் களுக்கு ரூ. 42.57 கோடி வழங்கியுள்ளது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 989 மாண வர்களுக்கு ரூ.32.80 கோடி வழங்கி யுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்த அதிக கல்விக்கடன் வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி நிலைக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் வாழ்த்தி னை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிப்ப வர்களுக்கு கடன் வழங்கப்பட்ட சதவீத அளவென்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 93 சதவீதம் கடன் வழங்கி யுள்ளன. ஆனால் தனியார் வங்கிகள் 45 சதவீத விண்ணப்பங்களுக்கு மட்டுமே கடன் வழங்கியுள்ளன. இது குறித்து வங்கிகள் கூட்டத்தில் ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் ரூ. 100 கோடிக்கு மேல் தரப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும். இந்த ஆண்டு ரூ. 125 கோடியையும் தாண்டி மாநிலத்தில் சிறப்பு முன்னு தாரணத்தை மதுரை மாவட்டம் ஏற் படுத்தியுள்ளது. அதேபோல் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் 89 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப் பட்டுள்ளது. இது இந்திய அளவில் சிறந்த முன்னுதாரணமாகும். இதற்காக தொடர்ந்து உழைத் திட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், வங்கி நிர்வாகத்திற்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னுடைய பாராட் டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் அதிக தொகையை கல்விக் கடனாக வழங்கியுள்ளன. வரும் கல்வி ஆண்டில் இன்னும் கூடு தலாக மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கான முயற்சி களை மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் என்ற அடிப்படையில் மேற் கொள்ளப்படும் என்று கூறினார்.