states

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம் மருத்துவ மாணவர்களிடம் மதுரை ஆட்சியர் விசாரணை

மதுரை,மே 2- மதுரை மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி எடுத்துக்கொண்ட விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் உள்ளிட்ட 4 பேரிடம் ஆட்சியர் அனீஷ் சேகர் மே 2 அன்று விசாரணை நடத்தினார்.  மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 30 சனிக்கிழமையன்று முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாணவர்கள் மருத்துவ உடை அணிந்த பின்னர் ‘ஹிப்போக்ரடிக்’ என ஆங்கில உறுதி மொழியை வாசிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சமஸ்கிரு தத்தில் ‘மகரிஷி சரக சபதம்’ என்ற உறுதிமொழி ஏற்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இதனைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேலுவை கட்டாயக் காத்தி ருப்பில் வைத்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களி டம் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மே 2 திங்களன்று விசாரணை நடத்தினார். பின்னர்  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் மற்றும் மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை.  ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதி மொழி எடுத்தோம். இந்த நிகழ்ச்சி அவசர கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் மதுரை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை என்று  தெரி வித்தனர்.