- பணி ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜி யத்தின் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்சநீதி மன்ற தலைமை நீதி பதிக்கு கடிதம் எழுதியுள் ளார்.
- பாகிஸ்தானுக்கு ரகசிய மாக முக்கியத் தகவல் களை அனுப்பியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒரு வரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி சூரிய கிர கணத்தன்று சென்னை பெரியார் திடலில் நடந்த மூடநம்பிக்கை முறி யடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு சாப்பிட்ட எழிலரசி என் பவருக்கு ஆரோக்கிய மான முறையில் பெண் குழந்தை பிறந்தது.
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு கல்லூ ரியின் ஆய்வகத்தில் ரசா யனம் கலந்த வாயு கசிந்த தில் 25 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
- சேலம் மாவட்டம் அரியா னூரில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல் லூரியில் தருமபுரியை சேர்ந்த நிர்மல்குமார் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.