சென்னை,அக்.13- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பு களுக்கான கலந்தாய்வு நடை பெற்று வருகிறது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு என 15 விழுக்காடு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் 15 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த ஆண்டை பொறுத்த வரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டும் என தேசிய மருத்துவ துறை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு வீணா வதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பி லிருந்து ஒன்றிய சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 விழுக் காடு இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை ஒன்றிய சுகாதாரத் துறைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் அனுப்பி உள்ளது.