states

ஆன்லைன் ரம்மியால் பணம் இழப்பு: காவலர் தற்கொலை

கோவை,ஜூலை 16- கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்ததால், மன அழுத்த த்தில் காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்குச் சொந்தமான இடத்தில் அரசு பொருட் காட்சி கடந்த ஒரு மாதமாக நடை பெற்று வருகிறது. இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் காளிமுத்து என்ற ஆயுதப்படை காவலர் வெள்ளி யன்று (ஜூலை 15) பணியில் இருந்து ள்ளார். அப்போது, துப்பாக்கி தோட்டா க்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள் ளது. இதைத்தொடர்ந்து காவலர் காளிமுத்து வயிறு மற்றும் முதுகு பகுதியில் ரத்த காயங்களுடன் அரங்கில் இருந்து வெளியே வந்து ள்ளார். இதை கண்ட கண்காட்சி யில் இருந்த ஊழியர்கள் காவல ருக்கு குண்டடிப்பட்டது குறித்து காவ ல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பந்தய சாலை காவல்துறையினர்  காளிமுத்துவை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும், சிகிச்சை பலனின்றி சனிக்கி ழமை(ஜூலை 16) உயிரிழந்தார்.  முதற்கட்ட விசாரணையில் காவலர் கடன் பிரச்சனை காரண மாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதும்; ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை இழந்திருப்பதும் தெரியவந்தது.