states

‘15 சதவிகித இடஒதுக்கீடு வழங்காவிட்டால் கர்நாடக தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்போம்!’

பெலகாவி, டிச. 22 - கர்நாடகத்திலுள்ள லிங்காயத் சமூகத்தினர் தங்களுக்கு 15 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு, பெலகா வியில் மாபெரும் பேரணி நடத்தி யதுடன், சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறும் பெலகாவி ஸ்வர்ண சவுதா-வை முற்றுகையிட்டனர். பாஜக அரசுக்கு எதிரான இந்த பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் பஞ்சமசாலி லிங்கா யத்து மடாதிபதிகள் உட்பட சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ள னர். இது பாஜக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மக்கள் தொகையில் லிங்காயத் வகுப்பினர் 17 சதவிகித மாக உள்ளனர். 102 பிரிவுகளைக் கொண்ட லிங்காயத் சமூகத்தில், பஞ்சமசாலி பிரிவினர் பெரும் பான்மையாக திகழ்கின்றனர். லிங்காயத்துகளில் வீர சைவ  லிங்காயத்துகள் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட் டில் பிரிவு 3B-ல் 5 சதவிகித இட ஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் பிரிவு 2A-க்குள் தங்களை கொண்டு வந்து 15 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பஞ்சம சாலி லிங்காயத்துகள் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக, கடந்த 4 ஆண்டு களாக, அங்குள்ள பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெலகாவியின் ஸ்வர்ண சவுதாவில், கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும்  நிலையில், வியாழனன்று தங்களின்  இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து, சட்டமன்ற வளா கத்திற்கு வெளியே பல்லாயிரக் கணக்கில் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது, கர்நாடக அமைச்ச ரவை கூட்டத்தில் தங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் 2023 துவக்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாஜக  கட்சியை புறக்கணித்து பஞ்சம சாலி மக்கள் பதிலடி கொடுப்பார் கள் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டத்திற்கு பாஜக  எம்எல்ஏ-வும், லிங்காயத் மடாதிபதி களில் ஒருவருமான பசனகவுடா பாட்டீலே தலைமை வகித்துச் சென்றார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். ஏனெனில் இந்தப் போராட்டம் இடஒதுக்கீட்டிற்கானது மட்டுமன்றி, பாஜகவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியோடு சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் லிங்காயத் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றா லும், தற்போது அவர்களுக்கு எதி ராகத்தான்  பஞ்சமசாலி லிங்காயத்து க்கள் 1 லட்சம் பேரை பாஜக எம்எல்ஏ  பசனகவுடா பாட்டீல் அணிதிரட்டி போராட்டம் நடத்தியுள்ளார்.  மேலும், கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவிகிதத்தில் இருந்து 17 சதவிகிதமாகவும், பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை  3 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தும் மசோ தாவை, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த போராட்டம் நடந்துள்ளது. இது  பாஜக தலைமைக்கு நெருக்கடி யாக மாறியுள்ளது.