states

‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களிப்போம்!

சென்னை, ஏப். 2 - பாசிச பாணி பாஜகவை வீழ்த்துவதற்கு ‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்று, தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ‘மக்கள் இயக்கங்கள் - 2024’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளன. 108 அமைப்புகள் ஒருங்கிணைந்து ‘மக்கள்  இயக்கங்கள்-2024’ என்ற அமைப்பை உரு வாக்கி உள்ளன. தேர்தலுக்காக உருவாக் கப்பட்ட இந்த அமைப்பு சார்பில் செவ்வாயன்று (ஏப்.2) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது 108 அமைப்புக்களின் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: “இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. அவசர நிலை காலத்தில் கூட முதலமைச்சர்களைக் கைது  செய்யவில்லை. தற்போது இரண்டு முதல மைச்சர்களைக் கைது செய்துள்ளனர். அம லாக்கத்துறை பாஜகவின் உண்மையான கூட்ட ணியாக உள்ளது. தேர்தல் நேரத்தில் காங்கி ரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான  வரித்துறை முடக்கி உள்ளது. தேர்தல் ஆணை யம் நடுநிலையாக செயல்படவில்லை. மோடி யின் பிரச்சாரத்திற்கு வசதியாக தேர்தல் அட்ட வணை தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்தும் என தேர்தல் ஆணை யத்தை நம்ப முடியவில்லை. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில்  மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்களில் 95 விழுக்காட்டி னர் இந்துவாக இருந்தாலும், ஒன்றிய அரசு நிவா ரண நிதி தர மறுக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்  திற்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. மதுரை எய்ம்ஸ்  ஒன்றை செங்கலோடு நிற்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 69 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு தான் தீர்மானிக்கும் என்பதை ஏற்க முடியுமா? சமஸ்கிருத வளர்ச்சிக்கு 643 கோடி ரூபாய் ஒதுக்கிய ஒன்றிய அரசு, தமிழ் உள்ளிட்ட 5 மொழி களுக்கு 29 கோடி ரூபாய்தான் ஒதுக்கியது.

தமிழ்  மொழி பற்றி பேசும் பிரதமர், உயர் நீதி மன்றத்தில் அலுவல் மொழியாக மாற்றவும், நீதிமன்றத்தின் பெயரை மாற்றவும் மறுக்கிறார். சிஏஏ என்ற பெயரில் இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் மோடி கொண்டு வரவில்லை. எனவே, பாஜகவை வீழ்த்தும் சக்தியுள்ள ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அரி பரந்தாமன் கூறினார். இந்நிகழ்வின் போது, ‘மக்கள் இயக்கங்கள் - 2024’இன் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, இளங்கோவன் (ஓய்வூதியர் கூட்ட மைப்பு), கே. பாலகிருஷ்ணன் (எஸ்கேஎம்), தியாகு (தமிழ்நாடு பொதுமேடை-2024), பத்திரி கையாளர் அய்யநாதன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய சென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பா ளர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டி யன்  திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.