states

‘பிரிவினை சக்தி’யான பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்புவோம்!

சென்னை, மே 3 - ஓராண்டைத் தொட்டுள்ள மணிப்பூர் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்ட, பிரிவினை சக்தியான பாஜக-வுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புவோம் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர் முகமது, மாநிலப் பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் அறிக்கையில் மேலும் கூறியிருப்ப தாவது: பாஜக-வால் பற்றியெரியும்  மணிப்பூர் மாநிலம் கடந்த ஆண்டு மணிப்பூரில் திட்டமிட்டு உரு வாக்கப்பட்ட பெரும் வன்முறைகளால் ஓராண்டு க்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலையில் அச்சத் தோடு மணிப்பூர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.   தனது அநியாயமான அரசியல் ஆதிக்கத்திற் காக மணிப்பூர் மக்களைப் பல கூறுகளாக பிரித்து, வன்முறையாளர்களாக மாற்றி, மக்க ளின் வாழ்விடங்களை வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி அழித்ததோடு, சில குறிப்பிட்ட பிரிவு மக்களை, பல ஆயிரக்கணக்கில் விரட்டி அடித்து விட்டு, மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி நூற்றுக்கணக்கானோர் ஆரவாரத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை வேடிக்கை பார்த்து நின்றது பாஜக-வும் அதன் ஒன்றிய, மாநில அரசுகளும். இதுவரை மக்களைச்  சந்திக்காத பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிற இந்திய மக்கள் மீது எல்லா சட்டங்களையும் மீறி தாக்குதல் நடத்தியது. இவ்வன்செயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கிற மணிப்பூர் மக்களை பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்து பார்வையிட்டு ஆறுதல் கூறினர். ஆனால் இந்தியாவின் தலைமை பீடத்தில் இருக்கிற பிரதமர் மணிப்பூர் பக்கம் எட்டிக் கூட பார்க்காமல் அந்த மக்களை பழிவாங்குகிற, அவமானப்படுத்துகிற காரியத்தை செய்து வருகிறார். சில நூறு தேவாலயங்கள் இடிக்கப்பட்டும், பல நூறு மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லா யிரம் பேர் அந்த மாநிலங்களை விட்டு விரட்டி யடிக்கப்பட்ட பின்பும், அந்த மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு ஆளும் கட்சியில் இருந்து யாரும் இல்லை என்ற அவமானத்தை அவலத்தை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓராண்டாக அமைதியை இழந்த மணிப்பூர் மணிப்பூரில் ஒன்றும் அமைதி நிலவ வில்லை. நடைபெறுகிற 18-ஆவது நாடாளு மன்றத் தேர்தலில் 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அப்படி என்றால் 543 தொகுதிகளுக்கு தானே தேர்தல் நடைபெற வேண்டும் ஆனால் இந்தியாவில் 545 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் ஒரு நாடாளுமன்ற தொகுதியை இரண்டாகப் பிரித்து இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துகிற லட்சணம்தான் மோடி அரசா ங்கத்தில் நடைமுறையில் இருக்கிறது. இதைவிட கேடுகெட்ட செயல் வேறு ஏதாவது இருக்குமா?  இவ்வாறு ஓராண்டுக்கு மேலாக மணிப்பூர் மக்களைத் தாக்கிய அளிக்கிற செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதோடு, மதரீதியாக- இனரீதி யாக அந்த மக்களை பிரித்தாண்டு ஒரு கலவர பூமி யாக நிலை நிறுத்த முயற்சி எடுக்கும் பாஜகவின் முயற்சிகளை முறியடிப்பதற்கு இந்திய சமூகம் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.