சென்னை, அக்.4 - ‘இந்தியா’ அணி தமிழகத்தில் பாஜக-வை முகவரி இழக்கச் செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். ‘நாட்டைக் காப்போம்’ எனும் முழக்கத்தோடு குடிமை சமூகங்கள் முன்னெடுத்துள்ள அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப் பயணம் திங்களன்று (அக்.2) தமிழ்நாட்டில் 6 மையங்களில் இருந்து தொடங்கியது. இந்த பரப்புரையின் இறுதியாக அக்.17அன்று மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னைக் குழுவின் பிரச்சார தொடக்க விழா எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாட்டை காப்போம் கூட்ட மைப்பு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இந்த நிகழ்வில் கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அரசியல் கட்சிகளோடு, குடிமைச் சமூகங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகள் போரா டும் சூழல் உள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இத்தகைய தோர் போராட்டமும் பாஜக-வை வீழ்த்த காரணமாக இருந்தது. நாட்டின் விடுதலைக்காக ஆங்கி லேயரை எதிர்த்து கடைக்கோடி மனித னும் போராடியதுபோல், பாஜகவை வீழ்த்த கடைக்கோடி இயக்கமும் கிளர்ந்தெழுந்து போராடும் சூழல் நிலவுகிறது. புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் முழு மாநில உரிமை கோருகிற நிலையில், ஒன்றிய அரசு முழு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதே சங்களாக மாற்றியது. அடுத்தடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட நடைமுறைக்கு வராத வகையில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
அடம்பிடிக்கும் ஒன்றிய அரசு
பீகார் மாநிலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டுள்ளது. கேரள அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தினால், பிற்படுத் தப்பட்டோருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரும் என்பதால் திசை திருப்பும் வேலைகளை செய்கிறது. வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது.
பன்முகத்தன்மை சிதைப்பு
ஒருவேளை பாஜக அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், குடியுரிமை கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தி நாட்டை சின்னாபின்னமாக்கும் அபாயம் உள்ளது. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலும், தேசத்தின் பன்மு கத்தன்மையை சிதைக்கும் நடவடிக் கைகளிலும் பாஜக செயல்படுகிறது. தமிழ் மொழியை புறக்கணிக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி வலுவான பிரச்சாரத்தை செய்து வருகிறது. 2024 நாடாளு மன்ற தேர்தலில் பாஜக-வை ‘இந்தியா’ அணி முகவரி இழக்கச் செய்யும். அதன் முன்னோட்டமாக, பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் இறுதி யாத்திரையை நடத்திக் கொண்டுள்ளார். இந்த பயணம் முடிவதற்குள் அவர் தலை வராக நீடிப்பாரா? என்பதே சந்தேக மாக உள்ளது.நாட்டை சிதைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளை தோலுரிக்கும் பயணமாக இந்த பிரச்சார இயக்கம் அமையும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹி ருல்லா, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதய குமார், நாட்டை காப்போம் பயணக் குழுவின் அமைப்பாளர்கள் வ.செப ஸ்டியன், பா.பாலமுருகன், சி.ஜே.ராஜன், இ.ஆசீர் உள்ளிட்டோர் பேசினர்.