‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போக’ என்பது வள்ளலாரின் வாக்கு. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்க ளுக்கு முன்பாகவே நாட்டின் முதல் குடி மகளையே அழைக்காத அளவுக்கு அதி காரத்தின் உச்சியில் இருந்து கொண்டு, பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை நடத்திக் காட்டினார் மோடி. திறப்பு விழா நடந்த பிறகும் புதிய கட்டிடத்தில் ஏன் கூட்டம் நடைபெற வில்லை? அது மட்டுமல்ல; புதிய கட்டி டத்தை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசாரை காவலுக்கு வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில், புதிய கட்டிடம் திறந்து பத்து நாளில் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து 200-க்கும் மேற் பட்டோர் பலியாகினர். ஒரு மாதத்தில் கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி வீழ்ந்தது. அதனால் வாஸ்துபடி சில மாற்றங்களை செய்கிறார்கள் என்ற ஆளுங்கட்சியின் தோ ழமைக்கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர் என்னிடம் சொன்னார். மழைபெய்தால் கட்டிடம் ஒழுகுவதாக ஆளுங்கட்சியின் எம்பி ஒருவரே சொன்ன தகவலும் உண்டு. இந்தியாவில் அதிகமாக இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமாக 43 ஆயிரம் கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. பழமையான கோவில்கள் 9 ஆயி ரம் உள்ளன. அப்படியானால் தமிழ்நாட்டில் வலதுசாரி அரசியல்தானே எடுபட்டு இருக்க வேண்டும்; ஏன் தலைகீழாக இருக்கிறது என்று வடநாட்டு எம்பி ஒருவர் என்னிடம் கேட்டார். தமிழகத்தின் ஆன்மீக மரபு தெரிந்தி ருந்தால் இந்த ஆச்சர்யம் அவருக்கு வந்திருக்காது. தமிழர்களின் முற்போக்கு மரபு மிகவும் வலிமையானது. தனித்துவ மானது.
வடஇந்திய ஆன்மீக மரபு வலிமை யைப் பேசுகிறது. தென்னிந்திய ஆன்மீக மரபு கருணையைப் பேசுகிறது. அவர்களது ஆன்மீகம் சடங்குகளும், சம்பிரதாயங்க ளும், சன்னியாசமும், மோட்சமும் கொண் டது. நமது மரபு அறம், பொருள், இன்பத் தைப் பேசுகிறது. இராமனின் மரணத்தின் மூலமாக, மோட்சத்திற்கு வழி என வால்மீகி ராமா யணம் உள்ளது. கம்பர் பட்டாபிஷேகத் தோடு கதையை முடித்துவிடுவார். வியாசர் எழுதிய ‘மகா பாரதம்’ குருச் ஷேத்திரப் போரோடு, மீண்டும் ஆட்சி நடத்தி, தன் பிள்ளைகளுக்கு பட்டாபிசேகம் செய்து வைத்து, பஞ்சபாண்டவர்கள் ஒவ் வொருவரும் இறந்து மோட்சம் அடையும் வரை கதை நீளும். ஆனால் திருவில்லி புத்தூராரின் ‘மகா பாரதம்’ போரின் வெற்றி யோடு கதை முடியும். சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக காப்பியங்கள், பக்தி இலக்கியம், சித்தர் கள், திருமூலர், அருணகிரிநாதர், தாயுமா னவர், வள்ளலார், திருவிக, அயோத்திதாசர் , பெரியார், சிங்கார வேலர் எனத் தொடர்ந்து வந்த செழுமைமிக்கது தமிழ் மரபு. வரு ணாசிரமக்கோட்பாட்டுக்கு நேர் எதிரானது தமிழர்களின் மரபு.
பிராமண ஆண்களைத் தவிர யாருக் கும் மோட்சம் இல்லை என்று மனு சொல்கி றான். ஆனால், தமிழின் தேவாரமோ, திரு வாசகமோ, பக்தி இலக்கியமோ எல்லாருக்கு மான மோட்சத்தைப் பேசுகிறது. கருணை க்கும், மனிதநேயத்திற்கும் தடையாக உள்ள அனைத்தையும் உடைத்து ஜனநா யகப்படுத்துகிற சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளாக அறுபடாத பேரியக்கமாக வந்துள்ளது. அதன் விளைவுதான் வள்ள லார்! அதன் விளைச்சல்தான் வைக்கம் போராட்டம்! பாளையக்காரர்களின் எழுச்சி, வேலூர் புரட்சிக்குப் பிறகு ஏறக்குறைய நூறு ஆண்டுகள் வெள்ளைக்காரனுக்கு எதிராக சின்னச்சத்தம் கூட தமிழ்நாட்டில் எழ வில்லை. இந்த அமைதியைக் குலைத்த முதல் குரல் வள்ளலாருடையது. 1886 தாது வருசத்துப் பஞ்சத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருந்த போது வளர்ச்சித் திட்டங்களைப் பேசினர் கால னியாதிக்க ஆட்சியாளர்கள். அவர்களைப் பார்த்துத்தான் ‘கருணையிலா ஆட்சி கருகி ஒழிக’ என்றார் வள்ளலார். கருணையும் அன்பும் நிறைந்த மாமனி தராக வள்ளலார் இருந்தார். வள்ளலார் என்ற மாமனிதனை தமிழகம் தனது நெஞ்சில் வைத்துப் போற்றுகிறது. கரு ணையும், அன்பும் நிறைந்த ஒரு சமூகத் தைப் படைக்க ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்ற வள்ளலாரின் முழக்கத்தை மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக முன்னெடுப்போம்.
திருச்சியில் தமுஎகச நடத்திய வள்ளலார் 200, வைக்கம் 100 கலை விழாவில் ஆற்றிய உரையிலிருந்து...