சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ெகாரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை சனிக்கிழமையன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேசான கொரோனா அறிகுறிகளுடன் 15 ஆம் தேதி தனிப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.