states

img

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பென்சன் முடக்கப்படும்

சென்னை, நவ. 9 - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்திய - மாநில அரசு  ஊழியர்களின் பென்சன் முடக்கப்படும் அல்லது குறைக்கப்படும் ஆபத்து உள்ளது என்று தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் செவ்வாயன்று (நவ.7) நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் முதலாவது அகில இந்திய   மாநாட்டை வாழ்த்தி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில்,  “நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும் மதத்தின் பெயரால் வெறுப்பு பிரச்சாரங்கள் நடைபெறு கின்றன. ஓய்வூதியதாரர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு  நாட்டிலும் உலகிலும் என்ன நடக்கிறது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை இருக்கிறது. கோரிக்கைகளுக்காக அரசை எதிர்த்து போராடுவது; ஒருபக்கம் இருந்தா லும் எதிர்கால நன்மைக்காகவும் போராடவேண்டும்” என்றார். மேலும், “பல மத்திய அரசு ஊழி யர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி ஆசிரியர்கள் தற்காலிகமாக எடுக்கப்படுகின்றனர். கல்லூரி ஆசிரி யர்கள் தற்காலிகமாக எடுக்கப்படு கின்றனர்.

தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ந்துவருகிறது. மறுபக்கம் வேலையின்மையும்  அதிகரித்து வரு கிறது.  நாம் புதிய பென்சன் திட்டத்தை  எதிர்க்கிறோம்; ஆனால் பழைய பென்சன் திட்டம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இது நீடிக்கும் என்று உத்தரவாதம் இல்லை.  2024 பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும். மீண்டும்  அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் தற்போது கிடைத்துவரும்  பென்சனும் கிடைக்காது.  புதிய ஆட்களை வேலைக்கு எடுப்பதில், பென்சனர் களுக்கு பென்சன் வழங்குவதில், விலைவாசி உயர்வு என பல பிரச்சனை களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் சில பத்திரிகைகள் நீங்கள் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் பென்சன் உயரும் என  எழுதுகின்றன; இதற்கான அறிவிப்பு இந்தாண்டு முடி வதற்குள் வரும் என்று பத்திரிகை கள்தான் சொல்கின்றன; அனை வருக்கும் 5 கிலே அரிசி கிடைக்கப் போகிறது என்ற கூட செய்திகள் வரு கின்றன. ஆனால் அதற்கான உத்தர வாதம் இல்லை. நாட்டில் லட்சக்கண க்கான மக்கள் விவசாயிகளாகவும் விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர்.  இதர  ஓய்வூதியம் பெறு வோரையும் நீங்கள் உங்களோடு சேர்த்துக்கொள்ளவேண்டும். அனை வரையும் இணைத்துப் போராடினால் தான் கோரிக்கைகளை வெல்ல முடியும்” என்றும் அவர் கூறினார்.

அ.சவுந்தரராசன்

சிஐடியு மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் பேசுகையில், “நிலக்கரி, எஃகு, ரயில்வே , காப்பீடு, தொலைத் தொடர்பு, ஆசிரியர்கள், மற்றும் பல துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார் கள். விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக  மத்திய அரசு வேளாண் தொடர்பான  சட்டங் களை திரும்பப்பெற்றது. பழைய பென்சன் திட்டத்தை அமலாக்ககோரி புதுதில்லி ராம் லீலா மைதானத்தில் சமீபத்தில் ஓய்வூதியர்களும் மத்திய அரசு ஊழியர்களும் பிரம்மா ண்டமான பேரணியை நடத்தியதை  பாராட்டுகிறேன். ஒன்றிய அரசு  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முக்கிய கூறு களை மதிக்காமலும் அவற்றை மீறும் வகையிலும் மதச்சார்பற்ற பன்முகத் தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகை யிலும் செயல்பட்டு வருவதால் நமது  நாடு மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டு களாக வெறுப்பூட்டும் பிரச்சாரம் அதிகரித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்க த்திற்கு பாடுபடக்கூடிய  தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்திய மக்களின் பல்வேறு தரப்பினருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து அனைத்துத் தரப்பினரையும் இணைத்துப் போராட்டங்களை வலுப்படுத்துவோம்” என்றார்.