states

img

தோழர் ஜி.மணி நினைவு சமூக விஞ்ஞான நூலகம்

திருவள்ளூர், ஜூன் 5- தோழர் ஜி.மணி நினைவாக பொன்னேரில் சமூக விஞ்ஞான நூலகம் அமைக்கப்படும் என்று தலை வர்கள் அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், அதன் மத்தி யக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் இருந்து திறம்பட பணியாற்றியவர் தோழர் ஜி.மணி. கடந்த ஆண்டு ஜூன் 5 அன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கால மானார். அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் ஞாயிறன்று (ஜூன் 5) பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கி னார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவ ட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.இ. சேகர், மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன்,  எஸ்.பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் இ.ஜெயவேல், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், மணியின் துணைவியார் கீதாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலை வர்கள், கம்யூனிஸ்டுகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னு தாரணமாக திகழ்ந்தவர் தோழர் ஜி.மணி என்றும் கட்சி ஊழியர் களுக்கு மன வலிமையை ஏற்படுத் தியவர் அவர் என்றும் குறிப்பிட்டனர்.  பயணத்தின் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பார். தான் படித்ததை கட்சி ஊழியர்களிடம். எளிமையாக  விளக்குவார்.  பல நூல்களை எழுதி யுள்ளார். மேலும் சிறந்த வாசிப் பாளர், எழுத்தாளர் என தலைவர்கள் புகழ்ஞ்சலி செலுத்தினர். தோழர் ஜி. மணியின் நினைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னேரி கட்சி அலுவல கத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சமூக விஞ்ஞான நூலகம் அமைக்க ப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் அறிவித்தனர்.