states

img

நீதித்துறையிலும் இந்தி திணிப்பு : கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை,ஆக.31- மறுசீரமைக்கும் 3 மசோதாக்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வியாழனன்று (ஆக.31) சென்னையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டம், (Indian penal code) குற்றவியல் நடைமுறை சட்டம் (code of Criminal Procedure)  மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act)  ஆகிய மூன்று சட்டங்களையும் மறுசீர மைக்கும் மூன்று மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆக. 12  அன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது. பழைய சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோக்களுக்கு முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக் ஷ்யா என்று இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. மேற்படி மூன்று மசோதாக்களும் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வால் அறிமுகம் செய்யப்பட்டு நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. காலனி ஆட்சி காலத்தில் உருவாக்கப் பட்ட சட்டம் என்பதால் அவற்றை சீர்திருத் தம் செய்யும் நோக்கில் புதிய மசோதா தாக்கல் செய்வதாக ஒன்றிய அரசு கூறி யிருக்கிறது. இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்க ளும், பல தேசிய இனங்களை சேர்ந்தவர் களும் வாழ்ந்து வரும் நிலையில் ஒன்றிய அரசு மூன்று மசோதாக்களை இந்தியில் பெயரிட்டுள்ளது ஜனநாயக விரோத நட வடிக்கையாகும். இது அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 348  க்கு முரணான நட வடிக்கை என்று தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன குரல் எழுப்பி வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதி மன்றம் முன்பு சமத்துவ வழக்கறி ஞர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக வழக்கறி ஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆர்ப்பாட் டத்தில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்   பார்வேந்தன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளர்  பாரதி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் ்செயலாளர் ச.சிவக்குமார், மாவட்ட செய லாளர் பா.சீனிவாசன் , திராவிடர் கழக பேச்சா ளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி,   விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பலர் பேசினர்.