வழக்கறிஞரும், அரசியல் வாதியுமான கியூச்சி டோகுடா 1894 செப்டம்பர் 12 அன்று ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் பிறந்தார். கிழக்கு ஜப்பான் என்றழைக்கப் பட்ட ஜப்பான் மக்கள் குடியரசின் வளர்ச்சியில் டோகுடா முக்கியப் பங்காற்றினார். இவர் தொடக்கப் பள்ளி ஒன்றில் மாற்று ஆசிரியராகவும், நகராட்சி செயலக எழுத்தராகவும் பணியாற்றியுள்ளார். 1922 இல் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்தில் பங்கேற்ற டோகுடா, பின்பு அதன் மத்தியக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜப்பானிய தொழிலாளர் ஒற்றுமைக் கட்சியின் முதல் தலைவராக திகழ்ந்த இவர், 1948 லிருந்து தனது இறுதிக்காலம் வரை (1953) அதில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியை மார்க்சிய-லெனினிச வழிகளில் மறுசீரமைப்பு செய்தார். 1948 இல் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜப்பான் சோசலிச கட்சிகளின் கிழக்கு கிளைகளை, ஜப்பான் தொழிலாளர் ஒற்றுமைக் கட்சியுடன் இணைப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார். இந்த ஜப்பான் தொழிலாளர் ஒற்றுமைக் கட்சியின் முதல் செயலாளராகவும், 1946 இல் உருவான ஜப்பான் மக்கள் குடியரசின் சிறந்த தலைவராகவும் திகழ்ந்தார். அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகள் சங்கம் (League Of Nations), 1950இல் மேற்கு ஜப்பான் மீது படையெடுத்த போது, மேற்கு ஜப்பானைப் பாதுகாக்க வேண்டிய சூழல் நிலவியது. ஆனால் மேற்கு ஜப்பானை இழந்து 1951 இல் ஹொக்கைடோவிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜப்பான் உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் ஆதிக்கம் தொடர்ந்ததால், கிழக்குப் பகுதியையும் இழக்க நேர்ந்தது. இறுதியாக, 1953 ஆக.10 அன்று போர் நிறுத்தம் கையெழுத்தானது.